பக்கம்:நாவுக்கரசர்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நாவுக்கரசர்

போல் திருநாவுக்கரசரை நோக்கி வருகின்றது. அவரோ தம்மை நோக்கிக் கடகளிறு வரக்கண்டும் சிறிதும் அஞ்சாது சிவபெருமானைத் தியானித்துப் பணிந்த வண்ணம் யானையை நோக்கி, நாம் இறைவனுடைய அடியார்கள்; யாதொன்றுக்கும் அஞ்ச வேண்டுவதில்லை. இனி யாம் அஞ்சும்படி வருவதாகிய இடையூறு எதுவுமில்லை’ என அறிவுறுத்தும் கருத்துடன் “சுண்ண வெண் சந்தனச் சாந்து’ (4.2) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ் மாலையைப் பாடுகின்றார்.

பலபல காமத்த ராகிப்

பதைத்தெழுவார் மனத்துள்ளே கலமலக் கிட்டுத் திரியும்

கணபதி என்னும் களிறும் வலமே திரண்டு சுடரும்

வான் கயி லாயமலையும் கலமார் கெடிலப் புனலும்

உடையார் ஒருவர்தமர்காம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்சவருவதும் இல்லை(5) என்பது இப்பதிகத்தின் ஐந்தாவது பாடல். ஒவ்வொரு திருப்பாட்டின் இறுதியிலும் கெடிலப் புனலும் உடையார் தமர்நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதுமில்லை’ என்று பாடுகின்றார். அங்கு வந்த அந்தக் கொடுமதக் களிறு அன்புருவாகிய நாவுக்கரசரை வலஞ் செய்து அவர்க்கெதிரே நிலத்தில் தாழ்ந்து இறைஞ்சி அவ்விடத்தை விட்டு அகன்று போகின்றது.

இங்ஙனம் சமணர்களால் ஏவப்பட்டுத் தம்மைக் கொல்ல வந்த மதக் களிறு இறைவனருளால் தம்மைக் கொல்லாது மீண்ட அற்புதத்தைப் பின்னொரு காலத்து நினைந்து பார்க்கின்றார் நாவுக்கரசு. மக்களனைவரும் இறைவன் திருவருளைத் துணையென நம்பி எத்தகைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/77&oldid=634431" இலிருந்து மீள்விக்கப்பட்டது