இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
166★நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
—————————————————————————
“கட்டாயம் வர வேண்டும்.”
“லட்ச தீபத்திற்குத்தானே? பிழைத்துக் கிடந்தால் வருகிறோம்... அது சரி இன்ஸ்பெக்டர், அந்தக் கதையின் பிரதியைக் கொஞ்சம் திருப்பித் தருகிறீர்களா?”
“ஓஹோ அது உங்களுக்கு வேண்டுமா?”
“வேண்டுமாவாவது! அதன் சக்தி எவ்வளவு பெரியது, அதை விட்டுவிட்டா போவது?”
நண்பர் இன்ஸ்பெக்டரிடம் அதைக் கேட்டு வாங்கிக் கொண்டார்.
“என்னைப் பற்றி எந்தக் கதையிலாவது எழுதி மானத்தை வாங்கி விடாதீர், ஐயா! நான் சுபாவத்தில் நல்லவன்!” வேடிக்கையாக இப்படிச் சொல்லிக் கொண்டே எங்களுக்குக் கைகூப்பி விடை கொடுத்தார் அவர். நானும் நண்பரும் திருவனந்தபுரம் இருந்த திசைக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு ஊர் திரும்பினோம்.
(கலைமகள், செப்டம்பர், 1957)