பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

—————————————————————————


அது ஓர் ஒன்றே காலணாச் சினிமாப் பாட்டுப் புஸ்தகம். அதன் அட்டையிலே வெகு ஆபாசமான முறையிலே ஒரு பெண்ணின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது.

“சீ. மானங்கெட்டவள்! தாய்க்குலத்தின் அதிதேவதையான என்னில் ஒரு சிற்றணு இப்படியுமா இருக்கிறது? உலகமும் ஆண்குலமும் உருப்பட்டாற்போலத்தான்!”

தேவி காறியுமிழ்ந்தாள்.

“மன்மதனைப் போய் எரித்தீர்களே? இந்தப் புஸ்தகத்தையும் இவளையும் இப்போது எரியுங்களேன்!”

“இதை எரித்து என் நெற்றிக் கண்ணைக் கறைப்படுத்திக்கொள்ளச் சொல்கிறாயா தேவீ? என்னால் முடியாது.”

“சரி, சரி! உடனே புறப்படுங்கள். ஒழுக்கத்தையும் நல்ல மனத்தையும் அழிக்கும் இவர்கள் ஆடிக் கெடுக்கப் போகிற உலகத்தை நீங்களே ஊழிக்கூத்தால் அழித்துவிடுங்கள்.”

“ஐயோ! நானாவது உரிய காலத்தில் காரணமில்லாமல் அழிக்கமாட்டேன்! இவர்களோ இளைஞர்களாக இருக்கும்போதே மனிதர்களை அழித்து ஒழுக்கத்தைக் குலைத்துவிடுகிறார்களே?”

“எக்கேடாவது கெட்டுப் போகட்டும், நீங்கள் வாருங்கள். நாம் நம்முடைய இடத்துக்குப் போகலாம்!”

எம் பெருமானும் தேவியும் கைலையங்கிரிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

கையலைங்கிரியிலிருந்த சூனியம் சிதம்பரத்துக்குப் புறப்பட்டுச் சென்றது.

(உமா, பொங்கல் மலர், 1958)