பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / கோலாட்டம் 213


“உங்களைத்தானே?.”

“என்ன?”

“ஒரு ஐந்து ரூபாய் பணம் வேண்டும்!”

“எதற்காக?”

“பத்துநாட்களும் இந்தப் பெண்கள் நம் வீட்டு வாசலில்தானே கோலாட்டம் போடப் போகிறார்கள். கன்னிப் பெண்களை வெறுங்கையோடு அனுப்பலாகாது. தினம் கொஞ்சம் கல்கண்டும் வெற்றிலை, பாக்கு, மஞ்சளும் வைத்துக் கொடுக்கலாமென்றிருந்தேன்.”

“செய்! இந்தா ரூபாய்…” மறு பேச்சுப் பேசாமல் டிராயரைத் திறந்து ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். அவள் வாங்கிக்கொண்டாள்.

“கோபமா உங்களுக்கு?”

“இல்லை!” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லி முடித்தேன். அவள் உள்ளே சென்றுவிட்டாள்.

காரியத்தைச் சாதிக்கும் திறன், முரண்டு, பிடிவாதம், இதெல்லாம் வயதும், அனுபவமுமுள்ள பெரியவர்களால்தான் முடியுமென்று நீண்ட நாட்களாக ஒரு எண்ணம் எனக்கு இருந்தது. இப்போது அந்த எண்ணம் உள்ளே பன்னிரண்டு பெண்கள் இருபத்து நான்கு கோலாட்டக் குச்சிகளில் எழுப்பிய ஒலியில் சிறிது சிறிதாக உடைந்து கொண்டிருந்தது!

(கல்கி, 12.1.1958)