பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி/வேப்பம் பழம் * 321

 களை அந்த முகத்தில் இருந்தது.அந்த வயதுக்கு இருக்கவேண்டிய கூச்சமும், நாணமும் அற்றுப்போய், ஏதோ பெரிய பொறுப்பைச் சுமந்து கொண்டு வாழ்கிறாற்போல் கண்களில் ஒர் ஒளி அமைந்திருந்தது. பேச்சில் காரியத்தைச் சாதித்துக் கொள்கிற ஒட்டுறவு சொற்களில் ஏழைமையின் குழைவு. நம்பிக்கையோடு சிற்சபேசனின் முகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.அந்தச் சிறுமி. வானத்தில் மேகத்தைத் தேடும் வறண்ட நிலத்து உழவனின் முகம் போல் அந்த முகத்தில் ஒர் ஆசைத் துடிப்பு மிதந்தது. சிற்சபேசன் வாய் திறந்தார்.

"உன் பேர் என்ன குழந்தை?"

“பட்டுன்னு சொன்னாத் தெரியும், சார் இந்த ஊர்லே நான் வேலை செய்யற வீடுகளிலே கேட்டுப் பாருங்கள் சார் என்னைப் பற்றி நல்லபடியாச் சொல்லுவாங்க.”

“அதிருக்கட்டும்! நீ பள்ளிக்கூடத்தில் படிக்கலியா?”

“எப்படி சார் படிக்க முடியும்? நான் சின்னவளா இருக்கப்பவே அம்மா போயிட்டா. அப்பாவுக்குச் சமையல் வேலை. கல்யாணம் கார்த்திகைன்னு முக்கால்வாசி நாள் வெளியூருக்குச் சமையல் வேலைக்குப் போயிடுவார்.தம்பி அப்போ சின்னக் குழந்தையா இருந்தான்.நான்தான் வீட்டோடு இருந்து பார்த்துக்கனும் தம்பி பெரியவன் ஆகி நெனைவு தெரியற சமயத்திலே அப்பாவும் செத்துப்போயிட்டா. அப்போ எனக்குப் பதினோரு வயது. பொறுப்பெல்லாம் என் தலையிலே விழுந்துடுத்து.”

"அதிலேயிருந்து இப்படித்தான் காரியம் செய்து சம்பாதிச்சுக் குடும்பத்தைக் காப்பாத்தறாயாக்கும்?”

"ஆமாம், சார்! எங்களுக்கு வேறே யாரும் இல்லே. மாமான்னு ஒருத்தர் மெட்ராஸ்லே இருக்கார். பேருக்குத்தான் அவர் மாமா. அவராலே உபகாரம் ஒண்ணுமில்லே. அப்பா போனப்போ கடிதம் எழுதினேன். அவர் திரும்பிக்கூடப் பார்க்கலே”

“வேறு யாரும் உறவு இல்லையா?”

“இந்த ஊரிலே இல்லே, எங்கெங்கேயோ இருக்கா. யாருமே எட்டிப் பார்க்கலே, பணம் காசு, சொத்து சுகம்னா எட்டிப் பார்ப்பா. நாங்க ஏழைப்பட்டவான்னு இளப்பம். யாரும் இருக்கியா, செத்தியான்னுகூட்க் கேட்கவரலை. இந்த ஊர்க் கிராம முன்சீப் இருக்காரே, ரத்னம் பிள்ளைன்னு ஒல்லியா சிவப்பா சந்தனப்பொட்டு வைச்சிண்டு சாவடி வாசல்லே உட்கார்ந்து கணக்கெழுதிண்டிருப்பாரே அவர்தான் ஒரு வழியா என்னைத் தைரியப்படுத்தினார். என்னைக் கூப்பிட்டார். 'குழந்தை! நீ தைரியமா இருக்கணும். தம்பியைப் படிக்க வைச்சுப் பெரியவனாக்கிறவரை நான் சொல்ற படி செய், ஊர்லே நாலு வீட்டிலே எடுபிடி காரியம், பெருக்கத் தெளிக்க ஏற்பாடு செய்யறேன். அதிலே கிடைக்கறதை வச்சிட்டு மானமாப் பிழைக்கலாம் - அப்படின்னு ஒரு வழி பண்ணிவிட்டார். அப்பா சொத்து, சுகம்னு ஒண்னும்

நா.பா. 1 -21