பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

430 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்




“ஆகா! கட்டாயமாக, அதிருக்கட்டும். இந்தப் பெண் உனக்கு நெருங்கிய உறவு என்றாயே! என்ன உறவு?”

சந்துரு அவருடைய இந்தக் கேள்விக்குப் பதில் கூறாமல் அவர் முகத்தையே பார்த்தார்.

“என்ன அப்படிப் பார்க்கிறாய் சந்துரு? உறவைச் சொல்வது சாத்திய மில்லையானால் வேண்டாம்”

"சொல்வது சாத்தியந்தான், ஸார்.”

“பின் ஏன் தயங்குகிறாய்?”

"இவள் என்னுடைய மனைவி!”

கவிஞரின் முகம் பேயறை வாங்கியதுபோல் வெளிறுகிறது. அவர் கையில் இருந்த 'வேனில் மலர்கள்’ நழுவிக் கீழே விழுகிறது. உடம்பே கூசிக் குறுகி அணுவாய்த் தேய்ந்து விட்டதுபோல் சிறுத்துக் குன்றி விடுகிறது. நிமிர்ந்து சந்துருவைப் பார்க்கிறார். ஒரு புகழும் இல்லாத அந்தச் சாதாரண உதவியாசிரியர் நிஷ்களங்கமாகச் சிரிக்கிறார்! -

(கலைமகள், தீபாவளி மலர், 1960)