பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

444 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



ஏழையாகிப் போயிருந்தார். அவருடைய நெடுநாள் சந்தேகத்துக்கு இன்று விடை கிடைத்துவிட்டது.

'உலகத்தின் சுகங்களையும், செல்வாக்கையும் முழுமையாக அனுபவித்தறியாத இந்த இருபத்தேழு வயது இளைஞன் மனிதர்களை எந்த அளவுகோலால் அளந்து பார்த்து மதிக்கிறான்? என்று அவர் மனம் பல நாளாக அறிந்து கொள்ளத் தவித்த கேள்விக்கு அன்று விடை கிடைத்துவிட்டது. ஆனால் அந்த விடை அவரை இவ்வளவு பெரிய ஏழையாக்கியிருக்க வேண்டியதில்லை.

(1960)