பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62. செருப்பு.

டைத்தெருவில் கலகலப்பு ஆரம்பமாகி விட்டது. எல்லாக் கடைகளின் முன்பும் கூட்டம்தான். எல்லாருக்கும் எல்லாக் கடைகளிலும், எல்லா நாட்களிலும், வாங்குவதற்கு என்னதான் இருக்குமோ? வாங்கினவர்கள் வெளியேறவும், வாங்க வந்தவர்கள் உள்ளே நுழையவுமாக நெருக்கடி நிறைந்த கடைத் தெருவில் சுறுசுறுப்பு களை கட்டியிருந்தது. மறுநாள் ஏதோ ஒரு பண்டிகை. அதற்காக முதல் நாளும் அரசாங்க விடுமுறை போல் இருக்கிறது. இல்லாவிட்டால் காலை வேளையிலேயே இப்படித் திருவிழாக் கூட்டம் கூடாது. குமரகுரு அவசரம் அவசரமாகக் கடையைத் திறக்க விரைந்தான்.

அந்தத் தெருவிலேயே குமரகுரு ஒருவன்தான் அன்று தாமதமாகக் கடையைத் திறந்து கொண்டிருந்தான். செருப்புக் கடைதானே? விடிந்ததும் விடியாததுமாக விற்கா விட்டால் வாடிப் போய் விடுமென்பதற்கு வாழைக்காயா, கொத்துமல்லி, கறிவேப்பிலையா? கடையைத் திறந்ததும் குப்பென்று தோல் நாற்றம் மூக்கைத் துளைத்தது. அந்த நாற்றத்தோடு கடைக்குள் அடைந்து கிடந்த நேரத்தில் சேர்ந்திருந்த வெக்கையும் வாட்டி எடுத்தது. வெக்கையும், நாற்றமும் குறையட்டும் என்று மின் விசிறியைச் சுழலச் செய்து விட்டு, ஸ்டூலை எடுத்துக் கொண்டு கடையின் போர்டைத் துடைப்பதற்காக வாசலுக்கு வந்தான் குமரகுரு.

ஸ்டூலைக் கீழே போட்டுக் கொண்டு ஏறி நின்று ‘இப்ராஹிம் ஷூ மார்ட்’ என்ற போர்டைப் பளிச்சென்று துடைத்தான். அவனுடைய முதலாளிக்கு எல்லாமே பளிச்சென்று இருக்க வேண்டும். தெருவிலோ தூசி அதிகம். ஒவ்வொரு நாளும் துடைத்தாலும், போர்ட்டில் தூசி படியத்தான் செய்யும். துடைக்கா விட்டால் முதலாளிக்கு வருகிற கோபம் பிரமாதமாயிருக்கும். வியாபாரத்தில் லாபம் பிரமாதமாக வருகிறதோ, இல்லையோ, கோபம் பிரமாதமாக வந்து கொண்டிருந்தது அவருக்கு. லாபம் எப்படி வரும்? பொழுது விடிந்தால், பொழுது போனால் அவருடைய ‘சிநேகிதிகளுக்கு’ மாட்டி விடுகிற ஓசிச் செருப்புக்களே நாலைந்து ஜோடிக்குக் குறையாதே! பெரிய முதலாளி இப்ராஹிம் சாயபு இருந்த போது இந்தக் கடையை எவ்வளவுக்கெவ்வளவு அவர் மகன் சலீம் பாழாக்கிக் கொண்டிருக்கிறார் என்பது வேலைக்காரன் குமரகுருவுக்குத் தெரிந்துதான் இருந்தது. அவர் காலத்திலும் அவன் இந்தக் கடையில் வேலை பார்த்தான். இப்போது அவர் மகன் காலத்திலும் வேலை பார்க்கிறான். -

அவன் இப்ராஹிம் ஷூ மார்ட்டில் என்ன வேலை பார்க்கிறான் என்று ஒரு பதவிப் பெயருக்குள் சுருக்கமாக வரம்பு கட்டி விட முடியாது. வருகிறவர்களை உட்கார