பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

———————————————————

முதல் தொகுதி / கருநாக்கு 585


திரும்பிப் பார்த்தேன். நம்பிராஜ ஐயர் சிரித்த முகத்தோடு, கை விலங்குகளை ஆட்டியவாறே, லாரியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.

ண்பர் பட்டாபி நாராயணன் இவ்வாறு கதையைக் கூறி முடித்தபோது, நாங்கள் வத்தலகுண்டை அடைந்திருந்தோம்.

“அந்த நம்பிராஜ ஐயர் இப்பொழுது ஜீவிய வந்தராக இருக்கிறாரா?” என்று நண்பரை நான் கேட்டேன்.

“ஆகா! பேஷாக இருக்கிறார். சர்க்கார் மானியமாகக் கிடைத்த தியாகி நிலம் ஐந்து ஏக்கர், பெரியாற்றுக்கால் பாசனத்தில் வாய்த்திருக்கிறது. அந்த வருமானத்தைக் கொண்டு வேம்பத்தூரில் சுகவாசம் செய்கிறார்! ‘வாக்கு சக்தியுள்ளவர்’ என்ற ‘கெத்து’ இன்னும் ஊர் உலகத்தில் அவருக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது!” என்று கூறிக்கொண்டே மாமனார் வீட்டில் நுழைந்தார் நண்பர் பட்டாபி.

(1963-க்கு முன்)