பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/625

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முதல் தொகுதி ! எங்கிருந்தோ வந்தது ★ 623




"வாட்-ஏ ஒண்டர்புல் இன்ஸிடெண்ட் (என்ன ஆச்சரியகரமான நிகழ்ச்சி)" - திருமதி அர்ச்வுட் கீச்சுக் குரலில் இரைந்து கத்தினாள். நாயர் ஆச்சரியந் தாங்காமல் குண்டுமாரி பொழிந்து கொண்டிருந்ததுப்பாக்கிக் குவியலை நெருங்கி அவற்றின்மேல் டார்ச் ஒளியைப் பரவவிட்டான்.

என்ன விந்தை! அவனுக்கு அதைக் கண்டு வியப்பதா? ஆத்திரப்படுவதா என்றே புரியவில்லை!

"அப்போதே - சொத் என்று சத்தம் கேட்டபோதே நினைத்தேன்!" என்று நாயர் முணுமுணுத்தான். மற்ற மூவரும் நெருங்கிப் பார்த்தனர்.

இரண்டு பெரிய உடும்புகள் துப்பாக்கிகளை ஒன்று சேர்த்துக் கட்டிக்கொண்டு அவற்றின் குதிரைகள் இருந்த பக்கமாக அழுத்தி, இறுக்கி இழுத்துக் கொண்டிருந்தன. திட்டமிட்டு முன்னேற்பாட்டோடு செய்த பெரிய காரியத்தை, கேவலம் இரண்டு உடும்புகள் படுதோல்வியடையச் செய்துவிட்டன. அவைகள் எங்கிருந்து வந்தன? எங்கிருந்தானால் என்ன? எங்கிருந்தோ வந்தன; வேட்டை தவறியது தவறியதுதானே!

(1963-க்கு முன்)