பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இரண்டாம் தொகுதி : தேனிலவும் ஒரு சாமியாரும்

845

திருமணமான பின் ஹனிமூனிலிருந்து திரும்பியதும் ஏன் அப்படித் தலைகீழாக மாறினான் என்பது மட்டும் அவனுடைய பழைய நண்பர்களுக்குப் பல நாள் வரை புரியாத புதிராக இருந்தது. உண்மை தெரியாத அவர்கள் தங்களுக்குள்ளே, “அவனோட மாமனார் ஒரு சாமியார்ப் பைத்தியம், இவனும் கல்யாணமானப்பறம் சாமியார்ப் பைத்தியமா மாறிட்டான். இதுதான் விஷயம்” என்று அவனுடைய மாற்றத்துக்குச் சாதாரணமான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அவனோ அந்தரங்கமான காரணத்தை விளம்பரப்படுத்தி அதன் பெருமையைக் குறைத்து விடாமல் அதை மனப்பூர்வமாகப் போற்றிக் கொண்டிருந்தான்.

(கலைமகள், தீபாவளி மலர், 1973)