பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

904

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

இப்போது பிள்ளை திருப்தியோடு புன்னகை பூத்தார். உடனே நிருபர் சாமிநாதன், “நீர் எதோ ஒரு ஃபிராட் நியூஸ் சொல்ல வந்தீரே? அதை யார் சொல்வி அனுப்பிச்சாங்க?”

“அதுவா? அது பொய்யாயிருக்கணும். சுலைமானோட மாமன் ‘ஃபார்ச்சூன் பகுருதீன்’ சொன்னான்; அதை நம்பாதீங்க…”

சாமிநாதன் தந்தி ஆபீசுக்கு ஓடினார். எக்ஸைஸ் அதிகாரிகளுக்கு மிகுதியான கடத்தல் தங்கத்தைக் கண்டு பிடித்து விட்ட மகிழ்ச்சியை விட அலைக்கரைப்பட்டி வட்டார நிருபர் சாமிநாதனுக்குத்தம் வாழ்நாளில் ஸென்சேஷனலாக எட்டுக் காலம் தலைப்புக்குரிய ஒரு முழு நியூஸ் கிடைத்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சிதான் மிகவும் அதிகமாயிருந்தது என்று சொல்ல வேண்டும்.

(1975-க்கு முன்)