பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : துல்லியமாக ஒரு மதிப்பீடு

923

கொண்டாந்திருக்கீங்களா? நீங்க தர வேண்டியது பதினேழு ரூபாய் எண்பத்தாறு காசு ஆகுது. வட்டியும் முதலுமாகச் சேர்த்துதான் சொல்றேன்” என்றார்.

“செட்டியார் சார்! இப்போ நான் ஒண்ணு கேட்கிறேன். தப்பா நினைச்சுக்காதீங்க. நான் திரும்பி வந்து அடகைத் திருப்ப முடியாமல் போயிருந்தா, உங்களுக்கு இந்தப் பதினேழு ரூபாய் எண்பத்தாறு காசு நஷ்டம் தானே? அப்படிநஷ்டமாகியிருந்தா, நீங்க முன்னே அடிக்கடி சொல்வீங்களே, என் மதிப்பீடு ரொம்பத் துல்லியமா இருக்கும்! நான் ஒருநாளும் நஷ்டத்துக்கு வியாபாரம் பண்ணினதில்லே. என்னோட வாடிக்கைக் காரங்களையும் நஷ்டப்பட விட்டதில்லைன்னு. அது பொய்யாய்ப் போயிருக்கும். இல்லையா?”

“யார் சொன்னா? நீங்க அடகு திருப்ப வராட்டி அந்த நாற்பது பக்க நோட்டிலே இருக்கிறதை நானே நம்மூர்க் கோவில் பெரிய திருவிழா சமயத்திலே, சின்னப் புஸ்தகமா அச்சடிச்சுப் போட்டு எட்டணாவோ, முக்கால் ரூபாயோ விலை வெச்சு வித்து எனக்குச் சேர வேண்டிய பதினேழு ரூபாய் எண்பத்தாறு காசை வரவு வெச்சுக்கிட்டுப் பேப்பர், பிரஸ், பைண்டிங் செலவு போக லாபத்தைக் கோவில் உண்டியல்லே போட்டுடலாம்னு இருந்தேனாக்கும்” என்றார் செட்டியார்.

வேல்சாமி அதைக் கேட்டு அசந்து போனான்.

“கவரை எடுத்துப் பிரிச்சுப் பாருங்க.”

பழ.சொ. கவரை எடுத்துப் பிரித்துப் பத்து நூறு ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை கண்டு மலைத்த போது, “எடுத்துக்குங்க! அவ்வளவும் உங்களுக்குத்தான். இவ்வளவு நாட்கள் நீங்க அந்த நோட்டுப் புஸ்தகத்தைக் காப்பாத்தித் தந்ததுக்கு என் வெகுமதி.”

“வெகுமதியாவது ஒண்ணாவது... அதெல்லாம் நான் வாங்குற வழக்கமில்லை.” என்று 982 ரூ. 14 நயா பைசாவைத் திருப்பிக் கொடுத்த பழ.சொ. அடகு ரசீதை வற்புறுத்திக் கேட்டார். -

“ரசீது இல்லே! எங்கேயோ தவறிப் போச்சு. நான் வேணா என் அடகுப் பண்டத்தைத் திருப்பி வாங்கிக்கிட்டதாக எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடறேன்.”

“அப்போ சரி! நான் சொல்றபடி எழுதுங்க, தம்பீ!” என்று தொடங்கிப் பழ.சொ.வே அவன் எழுதிக் கொடுக்க வேண்டிய கடிதத்தை ‘டிக்டேட்’ செய்யத் தொடங்கினார். அந்தக் கடிதத்தில் ரசீது தொலைந்து போனதை அவனே தெரிவிப்பது போல் எழுதச் செய்திருந்தார். பழைய ரசீதின் அடிக்கட்டையிலும் அடகு மீண்டதாக அவன் கைப்பட எழுதிக் கையெழுத்து வாங்கிக் கொண்டார். இவ்வளவும் முடிந்த பின்னரே, இரும்புப் பெட்டியைத் திறந்து அந்த நாற்பது பக்க நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக் கொண்டு மரியாதையாக வேல்சாமியிடம் திருப்பிக் கொடுத்தார். பழ.சொ. வேல்சாமி அதை வாங்கிக் கொண்டு,சிரித்தபடியே பழ.சொவை நோக்கி வினவினான்:-