பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி /ஆனால்...?

1005


முடியும்' என்பதை நிரூபிப்பன போலக் காட்சியளித்தன அந்தப் பள்ளத்தாக்கும் அதிலே பாயும் அருவிகளும் நாற்புறமும் வான முகட்டை அளாவி நிற்கும் பெரிய பெரிய மலைச்சிகரங்களுக்கு நடுவே தனியாக எவராவது அந்தப் பள்ளத்தைப் பார்க்க நேர்ந்தால் அதுவே அவர்களைப் பேயறைந்தது போலப் பயமுறுத்திவிடும். காற்றிலே மரங்கள் ஆடும் 'ஹோ' வென்ற ஒசையோடு அந்தப் பள்ளத்தில் விழும் தண்ணிரின் இசையும் சேர்ந்து பயங்கரமான தனிமையுணர்ச்சிக்குப் பின்னணி கீதம் பாடின. வன விலங்குகள், பறவைகள், இவைகளின் ஒலி வேறு இடையிடையே கேட்டன.

எழுதப்போகும் தொடர் கதையில் ஏதாவது ஒர் இடத்தில் இந்தக் காட்சியை வைத்து ஒரு சம்பவத்தைப் பின்னலாமென்று எண்ணினார் வேங்கடரத்னம் கையோடு கொண்டு வந்திருந்த கேமராவை எடுத்துச் சரியான கோணத்தில் அந்தக் காட்சியை ஒரு படம் பிடித்துக்கொண்டார்.வேலைக்காரனிடமிருந்து மேலும் கிடைத்த மட்டில் விவரங்களைச் சேகரிப்பதற்காக, அவனைத் தொடர்ந்து சில கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.

"அது சரி அவர்கள் இதிலே விழுந்து இறந்து போனதற்குக் காரணம் தற்கொலை நோக்கம்தான் - என்று நீ எதைக் கொண்டு நிர்ணயிக்கின்றாய்?”

“வழக்கு நடந்தபோது போலீஸ் தொந்தரவுக்காகச் சில விஷயங்கள் வெளிவரலிங்க ஆனால், உங்களிடம் அந்த விவரங்களைச் சொல்வதில் இப்போ ஏதும் பிழையில்லை. நான் எங்க பங்களா எஜமானர், நேற்று வந்திட்டுப் போனாரே வக்கீல், மூன்று பேரைத் தவிர வேறே யாருக்கும் இந்த விவரங்கள் தெரிஞ்சிருக்க நியாயமில்லை.”

“எனக்குத் தெரிவதனால் உனக்கு ஒன்றும் தீங்கு விளையாது. சும்மா, பொழுது போவதற்காகத்தான் கேட்கிறேன்.”ஆசிரியர் ஆவலோடு கேட்டார்.

“அந்தத் தம்பதி நம்ம பங்களாவிலேதான் தங்கியிருந்தாங்க! முதல் முதலாக இன்றுதான் நாலாவது மனிதராகிய உங்களுக்கு இந்த உண்மையைச் சொல்கிறேன்! அவங்க பேரு கூட எனக்கு நினைவிருக்குது அந்தப் பெண் பேரு. அதுனோடே அழகுக்கு ஏற்றாற்போலவே அழகான பேருதாங்க காதம்பரின்னு பேரு. அவரு பேரு ரகுராமன்”. அவன் இப்படிக் கூறிக்கொண்டுவரும்போது மூன்றாவது மனிதர் ஒருவர் "கேமராவும் கையுமாக வந்தவர் நேரே வேங்கடரத்தினத்தினருகே வந்து வணங்கினார். வேலைக்காரன் பேச்சை நிறுத்தினான்.

“அடேடே சுப்பராமனா?. நீ இங்கே எப்போது வந்தாயாம்? அங்கேயிருந்து புறப்படும்போது கூட உன்னுடைய புத்தக மதிப்புரை விஷயமாக ராமசாமியிடம் சொல்லிவிட்டு வந்தேனே! ஏதேது இந்த வருஷக் குற்றாலம் சீஸனை ஒரே ஜர்னலிஸ்ட்களா முற்றுகையிட்டிருக்கிறோம் போல் அல்லவா தோன்றுகிறது?"

“ஏதோ, திடீரென்று நினைத்துக் கொண்டேன். உன்னிடம் சொல்லிக் கொள்ளக்கூட அவகாசமில்லை.புறப்பட்டுவிட்டேன்.இங்கே தளவாய் ஹவுஸில் ரூம்