பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி ! ஆனால்...?

1009

 ஆனாலும், அந்த நிலையிலும் சில பெரிய திகைப்புக்குரிய சந்தேகங்கள் அவரைத் ஒத்பிரமை கொள்ளச்செய்திருந்தன.அத்தனை பேருக்கும் நடுவில் வெளிப்படையாகத் தன் சந்தேகத்தை எப்படிக் கேட்பது என்ற சங்கோஜமும் உடன் தோன்றியது.

"சுப்பராமா! நானும் டாக்டரும் இவளைக் கூட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போகிறோம். நீ, சாரோடே இங்கே இரு காலையிலே ஆஸ்பத்திரிக்கு வா! பாவம்! நடுராத்திரியில் சாரை ரொம்ப மனக் கலவரப்படுத்தி அவர் காரியத்தை எல்லாம் கெடுத்துவிட்டாள்!” - தென்காசி வக்கீல் இப்படிக் கூறிவிட்டுச் சுப்பராமனிடமும் ஆசிரியரிடமும் விடை பெற்றுக்கொண்டு, தாடிச் சாமியார் பின் தொடர, அந்த மோகினியைப் பிடித்து இழுத் துக்கொண்டு சென்றார். பால்கனியிலிருந்து, கீழே வக்கீலின் பிடியைத் திமிரிக்கொண்டு ஓட முயலும் அந்த மோகினியைக் கண்டு கொண்டிருந்த வேங்கடரத்னம், தன்னைக் காண்பவர்களின் சித்தங்களை எல்லாம் ஸ்வாதீனமில்லாமல் செய்துவிடும் இந்த அழகிக்காசித்தஸ்வாதீனம் இல்லை' என்று வியப்பால் வாயைப் பிளந்து கொண்டிருந்தார்.நிலா ஒளியில் வானத்திலிருந்து குதித்து ஒடும் தேவ மகள் போல அந்தக் காம்பவுண்டைத் தாண்டி மறைந்தாள் அவள். வேங்கடரத்னம் தன் பார்வையைத் திருப்பியபோது, ஏதேது? மோகினிப் பிசாசு பலமாகப் பிடித்துக்கொண்டு விட்டதோ? என்று கூறி அவரை நையாண்டி செய்தான் சுப்பராமன். அவன் கையில் கசங்கிய தாள்களும் அவருடைய பேனாவும் இருந்தது!

மறுநாள் பொழுது விடிந்தது!

“வக்கீல்தான் என் மாமனார். இந்தப் பெண் பத்மினி, அவருக்கு இரண்டாவது மகள் என் மனைவியின் தங்கை, சித்தஸ்வாதீனம் இல்லாததனால் இங்கே அடுத்த காம்பவுண்டிலுள்ள பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். இங்கே அவளைப் பார்த்துவிட்டுப்போகவே நானும் மனைவியும் வந்தோம்.வந்த காரணத்தை - என் மச்சினி பைத்தியம்’ என்பதைச் சொல்ல வெட்கப்பட்டேன் நான். அதனால்தான் நான் இங்கே வந்திருப்பது தெரியாமல் மாமனாரை விட்டு உங்களை விருந்துக்கு அழைத்தேன். ஆனால், இன்று சண்பக அருவிப் பாதையில் எதிர்பாராத விதத்தில் உங்களைக் கண்டு கொண்டபோது என் வரவை மறைக்க முடியவில்லை. எனவே, தனியே நான் மட்டும் வந்து தளவாய் ஹவுஸில் தங்கியிருப்பதாகவும், நீ வந்திருப்பதை நான் அப்போதுதான் அறிந்துகொள்வது போலவும் பொய் சொல்லி நடித்தேன். என்னை மன்னித்துவிடு”- சுப்பராமன் உருக்கமாகக் கூறினான்.

“என்னையும் மன்னிச்சுப்புடனுமுங்க. வேங்கடரத்னமும், சுப்பராமனும் வியப் போடுமாடிப்படியிருந்த பக்கம் திரும்பிப்பார்த்தனர்.வாட்ச்மேன் அங்கே நின்றான்.

“பக்கத்திலே பைத்திய ஆஸ்பத்திரிங்கிறதை மறந்து கவனக் குறைவா பங்களா கேட்டை மூடாமல் நேற்று ராத்திரி தவற விட்டுட்டேங்க”

"ஆனால்.” என்றார் வேங்கடரத்னம். அதற்கு மேல் அவர் என்ன தான் கூற முடியும்?

(1978-க்கு முன்)

நா.பா II - 25