பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142. பாக்கிப் பணம்

டைசி வாடிக்கைக்காரர் வரையில் அவர் நினைத்தது நடக்கவில்லை. இந்தக் கடைசி வாடிக்கைக்காரரையும் தவற விட்டு விட்டால், அப்புறம் நாளை விடிகிற வரை பணத்துக்கு வேறு வழியே இல்லை. நல்ல வேளையாகக் கடைசி வாடிக்கைக்காரன் ஓர் ஆந்திராக்கார ஆளாக இருந்தான். கடையிலும், கேஷ் மேஜை அருகிலும் கூட்டம் குறைவாக இருந்தது. வந்து சிக்கிய ஆளும் சரியான இளிச்சவாயனாக இருப்பான் போலத் தோன்றியது. கொஞ்சம் கூடப் பயமோ, அடக்கமோ இல்லாமல் ஒரு கத்தை நூறு ரூபாய் நோட்டுக்களை மடித்தும், பிரித்தும், கலைத்தும் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த வாடிக்கைக்காரன். நடுநடுவே எண்ணிக்கை மறந்து போய் விட்டதனாலோ, படிப்பறிவின்மையினாலோ அல்லது பணத்தைப் பற்றிய அலட்சியத்தாலோ எதனாலென்று தெரியவில்லை - அந்த வாடிக்கைக்காரன் அப்படி அப்பாவியாக நடந்து கொண்டான். .

சிமெண்ட், கட்டிட சாமான்கள், சானிடரி பொருள்கள், இரும்புச் சாமான்கள் மொத்த விற்பனை செய்யும் வியாபாரக் கடை அது. வடிவேலு அங்கே விற்பனை நிர்வாகி. பல ஆண்டுகளாகப் பழந்தின்று கொட்டை போட்டவர். வேறு வார்த்தைகளில் சொல்லலாமானால் பழைய பெருச்சாளி. இப்படி யாராவது அப்பாவிகள் சிக்கிக் கொண்டால் நூறு, இருநூறு பணம் பண்ணத் தயங்காத ஆள். எப்படி ஏமாற்றுவது என்பதிலும் அத்துபடி ஆனவர்.

வடிவேலுவுக்குத் தோதாகக் கேஷியரோ, பில் போடுகிற ஆளோ அருகில் இல்லை. கடை மூடுகிற நேரம். கேஷியர் முகம் கை கால் கழுவிப் புறப்படத் தயாராவதற்காகக் கடைக்குப் பின்புறமுள்ள கிணற்றடிக்குப் போயிருக்க வேண்டும். பில் போடுகிற பஞ்சாட்சரம் பக்கத்தில் காப்பி குடிக்கப் போயிருந்தான். சாமான் எடுத்துத் தருகிற ஆட்கள் மட்டும் வாடிக்கைக்காரருக்காகச் சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். . . . ... - . . . . .

வடிவேலுவின் மனம் ‘நயினார்’ வந்து இரகசியமாகச் சொல்லி விட்டு போன புது ‘உருப்படி’யைப் பற்றிய கற்பனையில் ஈடுபட்டிருந்தது. ‘நயினார்’ சொல்லி விட்டுப் போன வேளையோ அல்லது வடிவேலுவின் பலவீனமான நிலையோ தெரியவில்லை. அதே ஞாபகமாக இருந்தது. எப்போது கடையைப் பூட்டி விட்டுப் பணத்தோடு அங்கே போய் அந்த ‘எவளோ ஒருத்தி’யின் மடியில் தலையைச் சாய்க்கப் போகிறோம் என்று உள்ளே நைப்பாசை அரித்துக் கொண்டிருந்தது. :

எப்போதுமே இந்த விவகாரங்களில் ‘நயினார்’ எக்ஸ்பெர்ட். வடிவேலுவின் பிரியம், டேஸ்ட் எல்லாம் அவனுக்கு அத்துபடி. எப்போதாவது வந்து போகும்