பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/531

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி1 சந்தேகங்களின் முடிவில்.

  • 1153

சாப்பிடக் கொடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியாதா? இப்போது மணி பன்னிரண்டரை. இந்த நாலு நாலரை மணி நேரத்தில் ஃபிளைட்டில் சாப்பிட்டது எந்த மூலையில் போயிருக்குமோ? உங்களுக்கு நல்ல பசி இருக்கும். வம்புக்கு நீங்கள் புளுகிறீர்கள்.”

"உண்மையைத்தான் சொல்லுகிறேன். எனக்குச் சிறிது கூடப் பசிக்கவில்லை.”

ரியலி நிச்சயமாக

"அப்படியானால் நான் உங்களை வற்புறுத்த விரும்பவில்லை" என்று கூறிவிட்டுப் போய்விட்டாள் அங்கெலிகா. / - அவள் போனதும் நான் போர்வையை இழுத்துப் போர்த்துக்கொண்டு உறங்க முயன்றேன். என் உடம்பு மட்டும் அல்லாமல், பணம் இருந்த கோட்டுக்கும் சேர்த்துப் போர்வையை போர்த்தியிருந்தேன். அப்போதிருந்த புழுக்கத்தில் போர்வையே தேவைப்படாது. இருந்தாலும், பாதுகாப்புக்காக வலிந்து போர்த்திக் கொள்ள நேர்ந்திருந்தது.இந்தியாவில் இப்படி ஒர் ஆண்பிள்ளையோடு தனியறையில் இரண்டு இளம் பெண்களைத் தங்கச் சொன்னால் - அந்தப் பெண்கள் சந்தேகமும், பயமும், அடைவார்கள். இங்கேயோ நேர்மாறாக இருந்தது! இரண்டு பெண்களோடு தனியறையில் தங்க நேர்ந்து விட்டதற்காக ஒர் ஆண் பயமும், சந்தேகமும், கூச்சமும்பட நேர்ந்திருந்தது. இடமாறுதலாலும், நேரமாறுதல்களாலும் பல நாட்கள் சரியாக உறங்காமல் களைத்துப் போன நான் எப்போது எப்படி அயர்ந்து உறங்கினேனென்றே எனக்குத் தெரியாது. அடித்துப் போட்ட மாதிரி ஒரு துக்கம்.

மறுபடி கண்விழித்த போது குளிர்ந்த காற்று முகத்தில் வந்து உராய்ந்தது. வெளியே பறவைகளின் குரல்கள் கலந்து ஒலித்தன. அறைக்குள் பகலின் இளங்காலை வெளிச்சம் பரவியிருந்தது. - - -

கண் விழித்ததும் எதிர்க் கட்டிலைப் பார்த்தேன். காலியாயிருந்தது. விரிப்புக்கள் அழகாக மடித்துத் தலையணைகளின் மீது வைக்கப்பட்டிருந்தன. உடனே என் தலை மாட்டோடு அரவணைத்தபடி வைத்திருந்த கோட்டைப் பார்த்தேன். காணவில்லை! நெஞ்சு பதறியது. நழுவிக் கீழேயோ பக்கவாட்டிலோ விழுந்திருக்கலாம் என்ற அனுமானத்தில் பார்த்தால் அங்கேயும் கோட்டைக் காணவில்லை! 'சரி பணம்பாஸ்போர்ட் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டோம்.இந்த இரண்டு இரண்டரை மாதப் பயணத்தில் வியன்னாவில் பித்தோவன் ஒட்டலில் வந்து இப்படிச் சகலத்தையும் பறிகொடுக்க வேண்டுமென்று நம் தலையில் எழுதியிருக்கிறது போலும்! என்று என்னையே நொந்து கொண்டேன். பரபரப்பாக அறை முழுவதும் தேடினேன். கோட்டை எங்கும் காணவில்லை.

ஒட்டல் முழுவதும் வேறு அறையே இல்லாததுபோல் நாடகமாடி இந்த அறையில் தங்களோடு தங்கும்படி நிர்ப்பந்தப்படுத்தி, இரண்டு அழகிய ரெளடிப் நா.பா. Il - 34