பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி

தேய்மானம்

  • 1157

 "ஒரு பத்துருபாய் குடுத்தீங்கன்னா ஆட்டோவில் போயிடுவேன். வீட்டிலேருந்து கிளம்பறப்போ எடுத்துக்க மறந்துட்டேன்.கலைஞர்களுக்கு ஞாபகமறதி கூடவே பிறந்த வியாதி. நீங்களும் அனுபவப்பட்டிருப்பீங்களே?” “பக்கத்திலே எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் கடையிலே டெலிஃபோன் பண்ணிப் பேசி நீங்க இங்கே இருக்கிற தகவலைத் தெரிவிச்சுக் கார் அனுப்பச் சொல்லலாமா?” "அது கஷ்டம் சார்: டைரக்டர், தயாரிப்பாளர், மானேஜர்லாம் செட்ல இருப்பாங்க. அங்கே போன் கிடையாது.” “டாக்ஸியிலே போய் ஸ்டுடியோவில அவங்களையே டிஸ்போஸ் பண்ணி வாடகை குடுக்கச் சொல்லிவிடலாமே!” - “அது நல்லா இருக்காது சார்” நான் தயங்கி நின்றேன். - "நீங்க நாளைக்குச் சாயங்காலம் பேப்பர் வாங்க வரப்ப ஒரு பத்து ரூபா நோட்டோடு இங்கே காத்திண்டிருப்பேன்.”

தயங்கித் தயங்கி ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். வாங்கிக் கொண்டு நன்றி சொல்லி வணங்கி விட்டுப் புறப்பட்டார் அவர். அதற்குப்பின் சொல்லியபடி மறுநாள் அந்தப் பத்து ரூபாயைத் திருப்பிக் கொடுக்க அவர் வரவுமில்லை. அவர் வரவுக்காக நான் காத்திருக்கவுமில்லை. நாளடைவில் எனக்கு அது மறந்து போயிற்று. - . . . ஆறு மாதம் கழித்து உஸ்மான் ரோடில் சிவாவிஷ்ணு கோயில் எதிரே ஒரு சீவல் கடையில் நான் வெற்றிலை சீவல் வாங்கிக் கொண்டு நின்றபோது, "அண்ணா, வணக்கம். முந்தாநாள் உங்களை டி.வியிலே பார்த்தேனே? செய்திமலர்லே ராஜபார்ட் மாதிரி ஜம்னு பேசினீங்களே?” என்று பின்புறம் ஒரு குரல் ஒலித்தது. திரும்பினால் முத்துரங்கம்.

“உங்க தயவுலே ஐம்பது கிராம் சீவலும் எட்டணாவெத்திலையும் வாங்கிக்கறேன்” என்று என் இசைவுக்குக் காத்திராமலே மேற்படி அயிட்டங்களைக் கடைக்காரனிடம் வாங்கி முடித்துவிட்டார் முத்துரங்கம்.கேட்டதைவிட அதிகப்படியாக ஒருபாக்கெட் பன்னிர்ப் புகையிலையும் வாங்கிக் கொண்டிருந்தார்.

"என்ன, ரொம்ப நாளாய்த் தட்டுப்படவே இல்லையே, வெளியூர் போயிருந்தீங்களா?” . -

“அதையேன் கேட்கறிங்க அண்ணா? ஒரே வெளிப்புறப் படிப்பிடிப்பு மயம் ஏழெட்டுப் படத்தில் மாட்டிக் கிட்டிருக்கேன். முந்தா நாள் ஊட்டி, நேத்து செஞ்சிக்கோட்டை நாளைக்கி வைகை டாம்னு அலைச்சல்

இத்தனை வெளியாகிற படங்களிலே நடித்தும் இந்த மனிதருக்கு ஏன் இத்தனை பண வறட்சி என்ற திகைப்பு ஏற்பட்டது. நான் சினிமாபார்க்கிற ஆள் இல்லை.