பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/585

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————

இரண்டாம் தொகுதி/தொண்டு நிலைமையைத் து எனத் தள்ளி * 1207

புல்லடிமைத் தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக்கு இனி மனம் நாணித
தொல்லைகள் இகழ்ச்சிகள் தீர - இந்தத்

தொண்டு நிலைமையைத் தூ என்று தள்ளி

- ன்னு நீங்க பாரதியார் பாட்டைச் சொல்லுவீங்களே அந்த இடம்தான். முன்பெல்லாம் அடிக்கடி அந்தப் பாட்டை ரிபீட் பண்ணுவீங்க. ஆனா இப்பல்லாம் வர வர அந்தப் பாட்டையே சொல்றதில்லே நீங்க. ஏன்?” என்று கேட்டார். அவரிடம் அப்போது அதற்கு என்ன பதில் சொல்வதென்று ஒரிரு வினாடிகள் தயங்கி, “சொல்லாமல் என்ன? அதற்கு அவசியமிருந்திருக்காது. அதனாலே சொல்லாம விட்டிருப்பேன்’ என்று மழுப்பினான் கண்ணப்பன். வெளியே அப்படிப் பதில் சொல்லியிருந்தாலும் உள்ளே அவரது கேள்வி அவனுடைய மனத்திற்குள் கிளப்பி விட்டிருந்த சலனம் மிக மிகப் பெரியதாயிருந்தது. அவர் கேள்வி அவனை ஒர் உலுக்கு உலுக்கியிருந்தது.

முன்பு ஒரு காலத்தில் அவனது உணர்வுகளும் அந்தப் பாட்டின் அர்த்தமும் ஒன்றிப் போய்ப் பின்னிப் பிணைந்திருந்தன. இன்றும் அந்தப் பாட்டும், அதன் அர்த்தமும் சுதந்திரத் தன்மான ஆவேசம் நிறைந்துதான் இருந்தன. ஆனால் அவனிடமோ அவன் பிழைப்பிலோ அந்த ஆவேசங்கள் இல்லாமல் அடிபட்டுத் தேய்ந்து போயிருந்தன. பஞ்சம் பிழைக்க வந்த ஆண்டி போல் ஆகியிருந்தான் அவன். ஜனங்கள் அவனை நகைச்சுவைப் பேச்சாளன் என்றார்கள் கைதட்டினார்கள். அவன் எது சொன்னாலும் சிரித்தார்கள். ஆர்ப்பரித்தார்கள்.

அப்படி அவர்கள் எதற்காகச் சிரிக்கிறார்கள் என்று புரியாமல் சமயங்களில் அவன் உள்ளுர அழுதான்.தானே மெல்ல மெல்லச் சிரிப்புக் கிடமாகிக் கேலிப் பொருளாகிப் போனாற் போல உள்ளுற நலிந்து நாணிக் கூசிக் குறுகினான். ஆனால், பாவம்! மக்களுக்குத்தான் அது தெரியவும் இல்லை. புரியவும் இல்லை. (அமுதசுரபி, தீபாவளி மலர் - 1986)