பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Д5т. பார்த்தசாரதி 128

ராமலிங்கத்தைக் கேட்டான். முத்துராமலிங்கம் பதில் சொன்னான்:- .

    • tryggfag, சரியில்லே! வா! கொஞ்ச நேரம் "பீச் சிலே போய்ப் பேசிக்கிட்டிருக்கலாம். அப்புறம் தாங்கறதைப் பத்தி யோசிப்போம். ' ' . .

"ஏன் மனசுக்கென்ன வந்திச்சு

"வா! போகலாம் . என்று கடற்கரையை நோக்கி நடந்தான் முத்துராமலிங்கம். சின்னி பின் தொடர வேண்டிய்தாயிற்று. கடற்கரைக்குச் சென்று மணலில் அமர்ந்த பின்னும் சின்னிதான் முதலில் பேச்சை ஆரம்

'இந்த ஃபீல்டிலே உனக்கு நல்ல எதிர் காலம் இருக் குப்பா! நாலைக்கு நீயே தனியாக் கதை வசனம் பாடல் எல்லாம் எழுதலாம். பேர் வாங்கலாம்"

'எந்த ஃபீல்டைச் சொல்றே?’’

"அதான் சினிமா ஃபீல்டு:

"என்ன பாவம் பண்ணினேனோ பாபுராஜ் மாதிரி நிரட்சர் குட்சிங்களுக்குப் போயி அசிஸ்டெண்டா இருக்கச் சொல்றே?

'அவன் முதலியாருக்கு ரொம்ப வேண்டியவன். இந்த ஃபீல்டுலே ரொம்ப நாளா இருக்கான்." -

"அது போகட்டும்! இந்த ஊரே ரொம்ப வேடிக்கை யான ஊரா இருக்குதப்பா. இங்கே தகுதியும் திறமையும் உள்ளவனை ஒதுக்கறாங்க. ஒதுக்கப்பட வேண்டிய கழிசடைகளைத் தகுதியும் திறமையும் உள்ளவனாகக் காண்பிச்சுப் பாசாங்கு பண்றாங்க."

நெளிவு சுளிவு தெரியாத முழு நல்லவங்களைவிட, நெளிவு சுளிவு தெரிந்த மோசமான வங்களே போதும்னு எடுத்துக்கிறாங்க...அதுலே என்ன தம்பி தப்பு:" -