பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 湾2葛

சத்தியம்என்றொரு பொருளினை அலங்கரித்தே வெறும்: சாட்சியாய்க் கூண்டில் பூட்டி வைத்தோம் காந்தி என்றொரு மகாத்மாவைக் - " - . . காட்சிப் பொருளாய்க்க காட்டி வைத்தோம் - -- சுவர்களில் மாட்டி வைத்தோம் நேரு என்றொரு மனிதர் தம்மை நித்தம் பேசியே அலுத்து விட்டோம் மாநில வாரியாய்க் கட்சிகள் தாவும் மாபெரும் இந்திய சர்க்கஸ் புதியதோர் அற்புதம் நல்லவை எல்லாம் வெறும் காட்சிப் பொருளாய் நடையிழந்திருக்கத் - தீயவை எல்லாம் சேர்ந்தே எழுத்தே தெருவில் இயங்கும் - - பகடைகளாய் வளர்கிற பாரததேசம் பதவியே சுகமெனப் பரமானந்தத்திளைப் புடனிருக்கும். பஞ்சணை வாசிகள் கொஞ்சி மகிழும் பாரத தேசம் முப்பது வருடம் சுதந்திரமாக வாழ்ந்த பின்னும் தண்ணிர் குடிக்கத் தவிக்கும் ஏழைகள் கண்ணிர் வடிக்கும் கவலைகொள் தேசம் உண்ணச் சோறும் உடுக்கத் துணியும் . . . . . . . . கண்ணியமாகப் பார்த்திட வேலை யென்றொன்றும் கனவில் கூடப் பெற முடியாத சாவிய பூமி . இந்தியா எங்கள் இந்தியா ஆம் இது எங்கள் இந்தியா மனிதர்களைக் காட்டிலும் மனிதர்களைப் பார்க்கிலும் மியூளியங்களும், மிருகக் காட்சிசாலைகளும் மிகுந்த

...கவிதை பலத்த கைதட்டலுடன் வரவேற்கப்பட்டது. கட்டத்திற்கு இந்தக் கவிதை மிகவும் பிடித்திருந்தது. பாடி முடிந்தவுடன் கல்லூரி மாணவர்களைப் போல் தோன்றிய இளம் பெண்கள் சிலரும் இளைஞர்கள் சிலரும் கும்பலாக