பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 7. 9

காபி கிளாஸ்களோடு பையன் அறைக் கதவைத் தட்டி னான். கண்மணி தாழிடாமல் ஒருக்களித்துச் சாத்தியிருந்த கதவைத் திறந்தாள். - ~ - - - -

பையன் ஆவி பறக்கும் காபி கிளாஸ்களை மேஜைமேல் வைத்துவிட்டு நகர்ந்தான்.

காபி குடியுங்க..."அவள் காபி கிளாஸை எடுத்து அவனிடம் நீட்டினாள் சிரித்தபடியே அவன் அவளைக் கேட்டான். 'மிருகம் காபி குடிக்குமா?

'சே! சும்மா குத்திக் காட்டிப் பேசாதீங்க...நடந்ததை மறத்துடல்ாம்.' . . .

'மறக்கறதுங்கிறது காபி குடிக்கிறதைப் போல அத்தினி சுலபமில்லே...'

'அண்ணன் கோபமாப் பேசறப்பக்கூட அழகாயிருக்க கீங்க... - . . . - "சினிமாவிலேயும், அரசியலிலேயுமாப் பங்கு போட்டுக் கிட்டு இந்த அண்ணன் கிற வார்த்தையை இந்த ஊர்லே ஏறக்குறைய மான பங்கப்படுத்திட்டீங்க, அண்ணன்னு கூப்பிடற பொம்பளைங்க தங்கைமாதிரி நடந்துக்கனும், அக்கான்னு கூப்பிடற ஆம்பிளை தம்பிமாதிரி நடந்துக் கனும், இங்கே ரெண்டுமே இல்லே." -

கண்மணி பதில் பேசாமல் தலை குனிந்தாள். அவ ளோடு கட்சி, அரசியல் பொதுக்கூட்டம், கலைநிகபச்சி என்று பழகுகிற வேறு பல ஆண்களில் எவரும் அவளை இப்படித் தலைகுணிய வைத்ததில்லை. மாறாகச் சில. வேளைகளில் அவள் அவர்களைத் தலைகுனிய வைத்திருக் கிறாள். . . . . .

. முத்துராமலிங்கம் காபியைப் பருகினான். காபி பருகுவதற்காகக் கையை மேலே உயர்த்தியபோது அவனது. கையிலிருந்த பிளேடு கீறின காயத்தை அவள் பார்த்தாள்.

• அதென்னகாயம்...'