பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நிசப்த சங்கீதம்

"இதுவா? இதுதான் பேசிப் பேசியே வரை ஏமாத் தற்ாங்கன்னு நான் கூட்டத்திலே சொன்னதுக்கு உங்க கட்சிக் கண்மணிகள் அளித்த பரிசு.

'அடப் பாவிங்கள்ா'... 'நீங்களே உங்க கட்சிக்காரங்களை இப்படி அவங்க பேரைச் சொல்லிக் கூப்பிடலாமா?" - -

கண்மணி சிரித்தாள், முத்துராமலிங்கம், 'மறுபடி பார்க்கலாம்...வரேன்' என்று அப்போது விரைந்து அவளி டம் விடை பெற்றான். . . . . அவன் கீழே படியிறங்கித் தெருவுக்கு வந்து வடக்கு நோக்கிச் சிறிது தொலைவு நடந்ததும், அன்று வெங்க டேஸ்வரா ஹாஸ்டலுக்குத் தேடிச் சென்று காண முடியாத அந்த நண்பன் எதிர்ப்பட்டான். முத்துராமலிங்கத்தை எதிரே கண்டதுமே அந்த நண்பனின் முகம் மலர்ந்தது.

1 || . .

நீண்பனைச் சந்தித்த பின்பும், முத்தராமலிங்கத்தின் மனம் நடந்து முடிந்த நிகழ்ச்சியிலேயே இருந்தது. நண்பன் தன்னுடைய விடுதி அறைக்குப் போகலாம் என்று கூறி அழைத்துச் சென்றான். -

சென்னைக்குப் புறப்பட்ட சூழ்நிலையையும், வந்து சேர்ந்தபின் நடந்தவற்றையும் அவனிடம் விவரித்தபின் அவனைத் தேடி வந்து காணமுடியாமல் போய் விடுதி அறை பூட்டப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டான். நண்பன் அதிகமாகப் பதில் பேசவில்லை. -

தொடர்ந்து முத்துராமலிங்கம்தான் பேசிக்கொண் :டிருந்தான். நண்பன் மட்டும் படாமலும் ஒப்புக்கு ஏதோ மறுமொழி கூறிக் கொண்டிருப்பதுபோலத் தோன்றியது. வந்திருப்பவன் எங்கே தன்னோடு உடன்தங்கித் தனக்குச் செலவு வைத்து விடுவானோ? என்ற பயத்தோடும், அதிகச்