பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நிசப்த சங்கீதம்

கான்ஸ்டேபிள். மற்றொரு கான்ஸ்டேபிள் அறைக்குள் தலையை நீட்டி, -

'சீக்கிரம் புறப்படும்மா' மத்தவங்கள் ளாம் காத்துக் கிட்டிருக்காங்க'......... என்று அறைக்குள் கட்டிவில் கசங்கிய மலராகக் கிடந்த அந்தப் பெண்ணை விரட்டி

wo.

& Tröðr, - - - -

எஸ். ஐ. முத்துராமலிங்கத்தை முறைத்தபடி வினவினார் : - - -

"யாருடா நீ?"

இங்கே மாடியிலே தங்கியிருக்கேன்ஒகோ...பெர்மனென்ட் கஸ்டமரா?' * சார் : மரியாதை யாப் பேசுங்க..." - மற்றோர் அறை விழுந்தது அவன் கன்னத்தில். பொம்பிளைப் பொறுக்கிக்கெல்லாம் என்னடா மரியாதை -

முத்துராமலிங்கம் மேற்கொண்டு பேசவில்லை. விபசாரத்தைக் கண்டுபிடித்துக் குற்றம் சாட்ட வருகிற போலீஸ்காரர்களே விபசாரம் செய்பவர்களாகவும் திருட்டைக் கண்டுபிடித்து நியாயம் வழங்க வேண்டியவர் களே திருடுகிறவர்களாகவும் இருக்கிற சமூக அமைப்பில் சட்டத்தையும் ஒழுங்கையும் மக்கள் அலட்சியம் செய்வது கூடத் தவறில்லையோ என்றுகூடத் தோன்றியது. போலீஸ் காரர்களே திருடர்களாக மாறும் சூழ்நிலையில் யாரும் எந்த நியாயத்தையும் சட்டத்தையும் மதிக்க மாட்டார்கள் என்பது நிதர்சனமாகத் தெரிந்தது.

பிடிபட்ட பெண்களில் சிலர் உரத்த குரவில் வாய் விட்டு ஆழ ஆரம்பித்தார்கள். சிலர் மெளனமாகத் தை ல. குனிந்தபடி கண்ணிர் சிந்தினர். விபசார விடுதிக்கு வருகிற பலவீனமான மனிதனாவது பணத்தைக் கொடுத்துத் தான். மகிழ்ச்சியை வாங்கிக் கொள்கிறான். போலீஸ்காரனோ