பக்கம்:நித்தியமல்லி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


தந்தார்-படத்திலே அவர் விதிவழி ஏகுவதற்குமுன் பங்கு மார்க்கெட்டில் அடைந்த மகத்தான வெற்றியைப் பாராட்ட நடைபெற்ற விருந்து வைபவத்தில் இவர் எத துணை மகிழ்வின் திளைப்புடன் வீற்றிருந்தார்! ஆனல், அதே பங்கு மார்க்கெட் அவரை அதளபாதாளத்தில் வீழ்த்திய நிகழ்ச்சி கனவல்லவே!-ஆம்; கனவல்லதான்! தாயும் புதல்வியும் மெளனத்தை விழுங்க, காலம் வினாடிகளை விழுங்கிக் கொண்டிருந்தது. 来 肇 笨 'வாம்மா, சாப்பிடலாம்!" மகள் கூப்பிட்டாள். ஆகட்டுமம்மா' என்ற தாய், எதையோ கேட்க வாயைத் திறந்தாள். மறுகணம் எதையோ எண்ண மிட்டவளாக, திறந்த இதழ்களே மூடிக்கொண்டாள். 'அம்மா தமிழ்ச்சுடர்!. இந்தப் பரிசைப் பார்,' என்று சொல்லி, தந்தப் பெட்டியை தனது அருமைப் புதல்வி யிடம் கைநடுக்கம் தெரியாமல் நீட்டினுள் அம்மை. சுடர் அப்பரிசை கைநடுக்கம் தெரிய ஏந்திக்கொண் டாள். திறந்தாள். அழகும் கவர்ச்சியும் ஒளியும் கண்களே மயக்கும் நிலை யில் ஒரு வைர நெக்லஸ் அந்தத் தந்தப் பெட்டியில் இருந் தது! : - - - . நெக்லஸ் ரொம்பவும் அழகாக இருக்கம்மா!” என்று புகழ்ந்தாள் தமிழ்ச்சுடர். . இதைக் கேட்டுவிட்டு, அவள் தாய் விரக்தியோடு சிரித்தாள். - நி. 4-488

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/54&oldid=1277321" இலிருந்து மீள்விக்கப்பட்டது