பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் வாழ்க்கை 123 யில் விளங்குதல் வேண்டும். இக்காலப் பொருள் நிலையை நோக்க அக்கால இருபது ரூபா ஊதியமே உயர்ந்ததாகத் தோன்றுகின்றது. தமிழ் கற்ருேர் நிலை உயர வேண்டுமானுல் இக்கால நிலைமைக்கு ஏற்றபடி அவர்கள் விஞ்ஞானம் வரலாறு பொருளியல் முதலிய பல துறைகளிலும் வல்லுநராய் இருத்தல் வேண்டும். அவ்விதம் தமிழ்ப்புலவர்கள் தங்கள் நிலையை உயர்த் திக் கொள்வதற்கு வேண்டிய வழி வகைகளை நம் நாட்டு அரசாங்கம் பெரிதும் கவலை கொண்டு வகுத்தல் வேண்டும். அந்த நிலை வருமானல் இக்காலப் புலவர் களும் சங்க காலப் புலவர்கள் போன்று பெருமிதத் தோடு வாழ்ந்து பொதுமக்களுக்கும் இக்கால நிலைக்கு ஏற்ற வகையில் பல நன்மைகளைச் செய்தல் கூடும். Jyothi Printers, Madras 1