பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறவாப் புகழ் பெற்றவர் 25 "நான் எழுதி வரும் இந்த ஆதாரக் கல்வி முறைக் கட்டுரைகளின் உண்மைப் பொருளை இந்த நாட்டு மக்கள் என்றேனும் உணர்வார்களா ? அல்லது என் எழுத்துக்களெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகி விடுமோ ?” என்றெல்லாம் வருந்திக் கூறி யிருக்கின்ருர். அவர் எண்ணம் வீண் போகாமல் அவர் காலத்திலேயே கொழுந்து விட்டுத் தளிர்க்கத் துவங்கியது. இப்பொழுது நம் 輻門 அரசாங்கத்தார் ஆங்காங்கு நடத்தி வரும் ஆதாரக் கல்வி முறையின் சிறப்பினை நம் காந்தி அடிகளார் உயிருடன் இருந்து பார்ப்பாராளுல் பேருவகை எய்துவார். ஆனல், "அந்தோ மதப்பற்று மிக்க ஓர் அவசரக்காரரால் நம் காந்தி அடிகளார் நம்மை விட்டு மறைந்தனரே !” என்று நீங்கள் வருந்துகின்றீர்கள். நான் கூறுகின் றேன் அவர் இன்னும் உயிருடன் இருக்கின்ருர், ஒரு சிறிய உடலில் கட்டுப்பட்டிருந்த அவர் தம் ஆருயிர் இவ்வுலகம் முழுதும் பரவி அவர் தம் அடிப்படைக் கொள்கைகளைப் பரப்பி வருகின்றது. ஆதலால் இந்தப் பார் உள்ளளவும், பாரில் உள்ள நீர் உள்ள ளவும் அவர் புகழ் அழியாது. உலகில் உண்மை உள்ளளவும் உயரிய ஒழுக்க நெறிகள் உள்ளளவும் அவர் ஒளிவிட்டுத் திகழ்வார். அவர் தம் பொன்னுட லம் மறைந்தாலும் புகழுடம்பு என்றும் மறையாமல் ஓங்கித் திகழும். அவர் அமரராய் வாழ்ந்து நம் அனை வரையும் ஆதரிப்பார். அவர் வகுத்துக் காட்டிய ஆதார முறை மேன் மேலும் சிறப்புற்றுத் திகழும். நம் குழந்தைகளெல்லாம் அவர் தம் அடிச்சுவட்டினைப் பின்பற்றி நடப்பர்.