பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கித்திலக் கட்டுரைகள் அதை நடத்தி வருகின்ருர் என்று விளக்கிக் கூறி னேன். நான் சொன்னவை எல்லாம் அவருக்கு ஆச் சரியமாக இருந்தன போலும் அவர் உடனே தம் கண் களை நன்ருகத் துடைத்துக் கொண்டு, 'நான் இவ்வளவு காலமாகவா உறக்கத்தில் இருந்தேன்! நான் பச்சை யப்பன் கல்லூரிக்கு விடுமுறை விண்ணப்பம்கூட எழுதி அனுப்பவில்லையே ; இப்போதாவது உடனே நான் கல்லூரிக்குச் செல்லவேண்டும். இன்று என்ன கிழமை ? இப்போது மணி என்ன ? என்ருர். இன்று வியாழக்கிழமை இரவு 11 மணிக்குமேல் ஆகிறது. உங்களுக்குப் பச்சையப்பன் கல்லூரியில் இடம் இராது. அந்த இடத்தில் " டாக்டர் மு. வரதராசனர் அமர்ந்திருக்கின்ருர். அது இருக்கட்டும். உங்களுக்குப் பசியாக இருக்கும். இந்தப் பழங்களை உண்டு சிறிது பால் அருந்துங்கள் என்று நான் முன்னெச்சரிக்கை யாக எடுத்துச் சென்ற பழங்களை அவர் முன்பு உரித்து வைத்தேன். அவர் மிகவும் ஆவலோடு அந்தப் பழங் களை உட்கொண்டார். தெர்மா பிளாஸ்கிலிருந்து வார்த்துத் தந்த பாலினையும் சிறிது அருந்தினர். சிறிது நேரத்திற்குள் அவருக்கு ஊக்கம் அதிகரித்தது. முகத்திலும் நல்ல களை பிறந்தது. உடனே அவர் தம் மனைவியை நினைத்துக்கொண்டார். "சரஸ்வதியை மருத்துவ மனையிலிருந்து அழைத்துவந்து விட்டீர் களா?' என்று கேட்டார். நீங்கள் சொல்லுவது 29 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த செய்தி. தங்கள் மனைவி யார் சரஸ்வதி யம்மையார் மருத்துவ மனையிலிருந்து வந்து சுமார் ஓராண்டு உயிருடன் இருந்து பிறகு "இப்போது பேராசிரியர் பரமசிவானந்தம் இருக்கிரு.