பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 8 கித்திலக் கட்டுரைகள் அவர்களையெல்லாம் எழுப்பிவிடக் கூடாதா ?’ என்று ஆவலோடு கேட்டார். அவர்களை எழுப்புவதற்கு அவர் கள் உடலைக் கொளுத்திய சாம்பல்கூட இல்லையே என்று சொல்லி நான் வருந்தினேன். அப்படியானுல் என்னை மாத்திரம் ஏன் எழுப்பினுய் ? நான் தனியாக இங்கே இருந்துகொண்டு என்ன செய்வது ?" என்று சொல்லிக்கொண்டே இருக்கையில், திடீரென்று அவ ருக்குப் பழநியாண்டிப் பிள்ளை அவர்களின் நினைவு வந்தது. அந்தக் கம்பெனி எடுபட்டுவிட்டது' என் றும், அவர்தம் சொந்த ஊரில் ஓய்வாக இருக்கிருர் என்றும் கூறினேன். பிறகு, நீ என்ன செய்கிருய் ? உன் நிலையைக் குறித்துச் சொல்லவே இல்லையே. அந்தப் பெரிய பேச்சாளர் இராமசாமி நாயகர் எப்படி இருக்கிருர் ' என்ருர். நான் என் ஆசிரியத் தொழிலை விட்டு ஒய்வாக இருந்துகொண்டு மாணவர் மன் றத்தை நடத்தி வருவதையும், இராமசாமி நாயகர் பெரி யார் ஈ. வெ. ரா. என்னும் புகழுடன் சிறப்பாகவே இருத்துவருவதையும், தி. மு. கழகம்’ என்னும் ஒரு புதுக் கட்சியை அவர் மாணவர் சி. என். அண்ணு துரை அவர்கள் அறிஞர் என்ற சிறப்புக்குரியவராய் மிகத் திறமையாக நடத்திவருவதையும் விளக்கிக்கூறினேன். இந்தியாவுக்குச் சுய ஆட்சி வந்ததையும் பிறகு நான் கூறினேன் ; முடிவில் இந்தி’ என்னும் வடநாட்டு மொழி நம் தமிழை அடக்க முயலுவதையும் தெரிவித் தேன். இதைக் கேட்டதும் அவருக்கு மீசை துடித்தது. கண்கள் சிவந்துவிட்டன. அப்படியா ! இப்போதே புறப்படு உடனே ஒரு மாநாடு கூட்டு அந்தப் பயல்களை வெளுத்து வாங்கிவிடுகிறேன். அந்த இந்