பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 2 கித்திலக் கட்டுரைகள் தான். இதை அறிந்த கண்ணகி தன் கணவன் கள் வன் அல்லன் என்பதை அந்த நெடுஞ்செழியன் எதிரில் தன் சிலம்பினை உடைத்துக் காட்டி நிலை நாட்டினள். உடனே அந்தப் பாண்டியன், 'பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானுே அரசன் யானே கள்வன் ; மன்பதை காக்கும் தென்புலம் காவல் என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என’’ மயங்கி விழுந்தான் ; அவன் உயிரும் அப்போதே அவன் உடலை விட்டு நீங்கியது. வேலஞர் : நீங்கள் கூறுவது ஒரு வகையில் பொருத்தமாகவே இருக்கிறது. இதைப் பொது மக் களுக்கும் நன்கு விளக்கிச் சொல்லவேண்டும். நல்ல தங்கையின் கதையைக் கேட்டுத் தம் குழந்தைகளைக் கிணற்றில் போட்டுத் தாமும் உயிர் துறக்க எண்ணும் பெண்மணிகள் நாட்டில் இன்னும் பலர் உண்டு. திரு வள்ளுவர் இதனை இன்னும் சிறிது விளக்கமாகக் கூறி யிருக்கவேண்டும் . நாதர்ை : அவர் தாம் கவரிமா என்னும் விலங் கின் செயலால் நன்ருக விளக்கி இருக்கின்ருரே அது துாக்குப் போட்டுக் கொண்டோ, கிணற்றில் குளத்தில் விழுந்தோ செத்துப் போனதாக நாம் இதுவரையில் கேட்டதில்லை. வேலஞர் : பாண்டியன் நெடுஞ்செழியனைப் போல் அது தன் உடலில் உள்ள மயிரில் ஒரு சிறிது நீங்கிய உடனே நிலத்தில் விழுந்து உயிரை விட்டுவிடு வதாக உங்களால் கூற முடியுமா ?