பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi பல்கலைக் கழகத்தில் ஒரு சாதாரண விரிவுரையாளராகச் சேர்ந்து பல எதிர்ப்புகள், அவமானங்கள், நிந்தனைகள் இவற்றையெல்லாம் சகித்து, தமிழ்த்துறையை நிறுவிய செய்திகளை இந்நூலில் படிக்கும்போது பேராசிரியரின் உண்மையான தமிழ்ப் பற்றையும் தியாகவுணர்வையும் நம்மால் உணர முடிகின்றது. பதிமூன்று ஆண்டுகள் மக்கள் பேறு வாய்க்கப் பெறாதிருந்தபோது புதிதாகத் தொடங்கப் பெற்ற உயர்நிலைப் பள்ளியின் வளர்ச்சியிலேயே என் கவனம் சென்றதால் மக்கட்பேறு பற்றிய எண்ணம் என் மனத்தில் எழாதிருந்தது. என் மனைவியும் என் அன்னையும் தான் இதுபற்றி மிகவும் கவலைப் பட்டனர். அவர்கள் வற்புறுத்தலின் பேரில் இரண்டு மாத காலம் திருத்தலப் பயணத்தை மேற் கொண்டேன். இராமேச்சுவரத்தில் பல்வேறு. வைதிகக் கருமங்களை ேம ற் .ெ கா ன் ேட ன். எனக்கு மக்கட்பேறு (1949) ஏற்பட்டது. அந்த மகிழ்ச்சியை விட இப்போது துறை பிறந்தபோது பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது...விழா கொட்டகையில் அமர்ந்து கொண்டு திரு. பி. திம்மா ரெட்டி துறைகளைத் திறந்து வைத்தபோது கண்கள் குளமாயின! இரண்டு கன்னத்திலும் நீர் வழியத் தொடங்கியது. அருகிலிருந்த நண்பர்கள் என்னவாயிற்று? ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேட்க, ஒன்றுமில்லை; இஃது ஆனந்தக் கண்ணிர்!’ என்று: மறுமொழி பகர்ந்து கண்ணிரைத் துடைத்துக் கொண்டேன். (ப, 424)’’ என்ற பகுதியைப் படிக்குங்கால், தாயொருத்தி மகனை ஈன்று புறந்தந்த போது பெற்ற மகிழ்ச்சியைத் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பிறந்த ஞான்று இவர் பெற்றிருப்பதை அறிகிறோம்.