பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தோற்றம் 置、5 மூன்றாண்டுகள் தமிழ் நாட்டுக் (அப்போது சென்னை: ஆந்திரம், கேரளம் அடங்கிய பகுதி) கல்வித்துறை இயக்குநராகப் பணியாற்றித் தம் சீலத்தாலும் உயர்ந்த பண்பாட்டாலும் பல்லாயிரம் ஆசிரியர்களின் உள்ளங் களைக் கவர்ந்தவர்கள். பல்லாண்டுகள் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் உறுப்பினராகவும் இடை இடையே துணைவேந்தராகவும் இருந்து பணியாற்றி அப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சர் ஆ. இலக்குமணசாமி முதலியார் (எ. எல். முதலியார்) அவர்கட்கு உறுதுணையாக நின்று பெரும்புகழ் பெற்றவர் கள். அன்றியும் சென்னைப் பல்கலைக்கழகத் தெலுங்குப் பாடத்திட்ட ஆய்வுக் குழுவிலும், கீழை நாட்டு மொழி களின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவிலும் உறுப்பினராகவும் தலைவராகவும் ஏறக்குறைய முப்பதாண்டுகளாகப் பணி யாற்றி மக்களுக்குக் கண்போல் விளங்கும் மொழிகளின் தரத்தை உயர்த்தி மொழித் துறையை வளமாக்கி வருப வர்கள். கடந்த பல்லாண்டுகளாகத் தென்மொழிப் 1435&ti Qurgyllum Eið3, Gap (Southern Language Book Trust) விற்குத் தலைவராக இருந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் பொது மக்களுக்கெனப் பலநூல்கள் வெளிவரக் காரணமாக இருந்து வருபவர்கள். கடந்த ஒன்பதாண்டுகளாகத் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்து கொண்டு அதன் வளர்ச்சியிலும் பெருமையிலும் அதிகக் கவனம் செலுத்தித் கண்காணித்து வருபவர்கள். இத்தகைய கல்வித்துறை ஜாம்பவான்’ திருவேங்கடவன் பல்கலைக்கழகத்திலும் "தமிழ்’ இடம்பெறச் செய்து அதன் வளர்ச்சியில் கடைக்கண் நோக்கைக் கொண்டவர்கள். ஒருதலைச் சார்பற்ற உள்ளத்தைக் கொண்ட இவர்கள் ஆசியாலும் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங் கொண்டலின் திருவருளாலும் தமிழ்த்துறை விரிவடைந்து பல தமிழறிஞர்கள் ஒருங்கிருந்து பணியாற்றும் வாய்ப்பு அண்மையில், ஏற்பட வேண்டும். அன்றியும், பல்கலைக்