பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறநெறி' -நூல் வெளியீடு I 75 பயன்படுத்தும் வழி முறை தெரியாது உழன்று நெறி தவறிய வாழ்வினால் வேறு பல நோய்களையும் தேடிப் பாழ்படுகின்றனர். இப்பொழுது மேனாட்டு அறிஞர்கள் உயிர் நிலைகளின் நுட்பங்களைச் செவ்வனே ஆய்ந்து அவற்றின் இயல்புகளை எவரும் எளிதில் உணரும் முறை ஆயில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளனர். அந்த துட்பங்களையெல்லாம் மனத்திற்கொண்டு பல அறிவியல் கருத்துகளை விளக்க வேண்டும் என்ற திட்டம் நீண்ட நாட் களாகவே என் மனத்தில் கால் கொண்டிருந்தது. உயிர் நிலையாகவுள்ள உறுப்புகளைப் போற்றிப் புரத்தலும், நெறியுடன் ஆளுதலும் மணமக்களின் முதலாயகடனாகும்; கடமையுமாகும். கல்வி முடிந்த பிறகு என்னுடைய ஊழ் ஆசிரிய வாழ்க்கையில் தள்ளியது. துறையூரில் பணியாற்றிய ஒன்பதாண்டுக் காலத்தில் பள்ளியின் பன்முக வளர்ச்சி யிலேயே என் காலமெல்லாம் கழிந்தது.தமிழ்ப்படிப்பிலும் கவனம் சென்றதால் என் திட்டத்தைத் தொடங்க முடிய வில்லை. அறிவியல் துறையில் என் கவனம் செல்ல வில்லை. காரைக்குடிப் பத்தாண்டு வாழ்க்கையிலும் முதல் ஏழாண்டுகள் கல்வித்துறை, உளவியல் துறையிலேயே என் கவனம் முழுதும் சென்றது. இதன் விளைவு தமிழ் பயிற்றும் முறை, அறிவியல் பயிற்றும் முறை, கல்வி உளவியல் என்ற மூன்று நூல்கள் முகிழ்த்தன. காரைக்குடி வாழ்க்கையின் பிற்பகுதியில் என் கவனம் அறிவியல் நோக்கில் சென்றது. விளைவு மானிட உடல் (மொழி பெயர்ப்பு). அணுக்கரு பெளதிகம் (மொழி பெயர்ப்பு), அணுவின் ஆக்கம் (முதல் நூல்) ஆகிய மூன்றும் பிறந்தன. வேறு சில இலக்கியநூல்களுங் நூற்றுக்கணக்காக(செய்தித் த்ாள்களில்) வெளியான இலக்கியக் கட்டுரைகளும் தோன்றின. இந்தக் காலத்தில்தான் திரு.வி.க.வின் 'பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை' என்ற நூலை;