பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 நினைவுக் குமிழிகள்-4 இருந்தது). படிக்கவைக்க முயன்றேன். B.E படிப்பதற்கு QLuises;ff Indiansnstituteof Science#GjobQ&éârgoor-G,Girm in பேட்டையிலுள்ள MITக்கும் விண்ணப்பங்கள் அனுப்பப் பெற்றன. பெங்களுரிலிருந்து மறுமொழி இல்லை. முதல் வகுப்பு மாணாக்கர்கடகே கிடைக்காதபோது இவனுக்கு எப்படிக் கிடைக்கும்? என்னுடைய அரிய நண்பரும் மிகவும் செல்வாக்குள்ள வருமான திரு. சுந்தரம் அய்யங்கார் மூலம் (குரோம்பேட்டை அய்யங்கார்) முயன்றேன். அவர் எனக் காகத்தனது காரில் அழைத்துச் சென்று பலரைப் பார்த் தார்:பயன்இல்லை. ஊழ் இல்லை என்று வாளா இருந்து விட்டேன். ஒழுங்குமுறைகளைக் கடைப்படிக்காத் பையனை என்ன செய்வது? என்று புரியவில்தை. 1. 1. T யில் (சென்னை) M.Sc. யில் சேர்த்து விட்டால் அந்த நிறுவனத்தின் விதிமுறைகளே இவனைச் சீர்ப்படுத்தும் என்று நினைத்து அதில் சேர்க்க முயன்றேன். இங்கு பாடத்தில் பெற்றுள்ள மதிப்பெண்களைத்தான் பார்ப் பார்கள்; அந்தப் பாடத்திலுள்ள அறிவை இது விளக்கு வதாகக் கொள்வார்கள், இந்த நியதியால் இவனுக்குத் தேர்வு எழுத வாய்ப்பு தந்தார்கள். நானும் பையனுடன் வந்து 1.1.1 விடுதியில் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். இங்குப் பள்ளியிறுதித் தேர்வில் வாங்கினமதிப் பெண் 10%, PUCயில் வாங்கின மதிப்பெண் 20%, பி, எஸ்சி தேர்வில் பெற்ற மதிப் பெண் 50% (ஆக 80%) இங்கு நடைபெறும் எழுத்து முறைத் தேர்வில் 10% வாய்மொழித் தேர்வில் 10% (ஆக 20%) கூட்டி இருந்த மதிப்பீட்டில் முதல் 15 பேர்கட்கு இடம் அளிக்கப் பெறும் என்பது நடை முறை. இது சிறந்த முறை. ஒரு பையனது படிப்பறிவைப் பள்ளியிறுதித் தேர்விலிருந்தே கவனித்து வரும் முறை யாதலால் முறையற்ற முறையில் பி. எஸ்சியில் மதிப்பெண் பெறும் வழக்கத்தைத் தகர்த்தெறியும் முறையாகவும் இருந்தது. அனைவராலும் வரவேற்கக் கூடியதாகவும் இருந்தது திருவேங்கடவன் பல்கலைக் கழகத்திலிருந்து