பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் நியமனத்தில் சில முறைகேடுகள் 莎29 அப்போது முதல்வராக இருந்தவராக ஆங்கிலப் பேராசிரியர் M.V. இராமசர்மா. அங்ங்ணமே தேர்வு அதிகாரி M. குடும்பராவ் என்பாரையும் தற்காலிகப் பதவி நீக்கத் திற்குக் குறிவைத்தார். இஃது எப்படியோ பரவிக் கல்வி அமைச்சர் M U. கிருஷ்ணராவ் காதிற்கும் எட்ட, அவர் அரசியல் சார்பாகவுள்ள ஆட்சிக் குழுவினர்களின் காதைக் கடித்து அனுப்பினார். திரு குடும்பராவ் M.V. கிருஷ்ண ராவுக்கு உறவினர்: மிகவும்வேண்டியவர். இதனால் அவர் காக்கப் பெற்றார். இவர் காரணமாக அனைவரும் காக்கப்பெற்றனர். ஆட்சிக்குழுக் கூட்டத்தில் நடை பெற்றது என்ன? அரசு சார்பாக வந்த ஓர் உறுப்பினர்; பதவிலிருந்து விலகிப் போகும் துணைவேந்தருக்கு அதுவும் அவர் கலந்து கொள்ளும் இறுதிக் கூட்டத்தில், இத்தகைய தீங்கு விளைவிக்கும் செயல் எதற்கு? புதிய துணைவேந்தர் இந்த விஷயத்தைக் கவனித்துக் கொள்வார். இந்தக் கூட்டத்தில் நிகழ்ச்சி நிரலிலுள்ள எந்தப் பொருளைப் பற்றியும் தீர்மானிக்கவேண்டா. ஆறு ஆண்டுகளாகப் பல்கலைக்கழகத்தை நன்முறையில் நடத்திய துணைவேந்த ருக்கு நன்றி செலுத்தி சிற்றுண்டி விருந்துடன் கூட்டத்தை நிறைவு செய்வோம்’ என்று கூறியதால் கூட்டம் நிறைவு பெற்றதாம். திருமதி இந்திராகாந்தி நாட்டின் ஒழுங்கு முறைக்காக கொண்டு வந்த அவசரகால நிலையை பல்வேறு துறைகளில் மேல்மட்டத்தில் பணியாற்றிய பல கயவர்கள் இந்தத் திட்டத்தையே குலைத்து; அந்த அம்மையாருக்கு அழியாப் பழியைத் தேடித் தந்தனர்; சர்க்காரியா கமிஷனும் தோன்றியது. நாட்டின் செல்வம் சர்க்காரியா கமிஷனால் வீணாகக் கரைந்தது. ஏதோ திருப்பதியில் பணியாற்றிய காரணத்தால் டாக்டர் ஜகந்நாதரெட்டியின் தீச்செயலை ஏழுமலையான் தடுத்து நிறுத்தி அவரைக் காத்தான். அவசரகால நிலையில் கயவர்களின் கைங்கரியத்திற்குப் பலியாகி நி-34 சொல்