பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/576

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

惠4念 நினைவுக் குமிழிகள்-4 மேம்பாட்டுக்காக உழைக்கின்றார் 1977 இல் ஒய்வு பெறுகிறார். இவர் பதவிக் காலத்தை ஐந்தாண்டுகள், நீட்டிக்கலாமா என்று நினைக்கின்றேன்' என்று திரு அன்பழகனிடம் கூறினார். அவருடைய நல்லெண்ணத்தை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர். டாக்டர் தாமோதரனின் மனம் மட்டிலும் சுருங்கியதை அனைவரும் கண்டனர். சரியாக 2.30க்கு பிற்பகல் நிகழ்ச்சிகள் தொடங்கின. டாக்டர் ம. ரா. போ. குருசாமி திகழ்ச்சிக்குத்தலை மைதாங்கி அவருடைய ஆய்வுக்கட்குரையைப் படித்தார். டாக்டர் சி. ப ா ல சு ப் பி ர ம னி ய ம் , டாக்டர் P. செளரிராஜன் ஆய்வு மாணவர் தேவசங்கீதம்' அவர வர்களின் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தனர். டாக்டர் தண்டாயுதம் அனுப்பிய ஆய்வுக் கட்டுரையைத் தமிழ்ச் சங்கம் மாணவத் தலைவர் படித்தார், மாலை 5 மணிக்கு பிற்பகல் நிகழ்ச்சிகளும் இனிது நிறைவு பெற்றன. டாக்டர். மு. வ.வின் மாணவர் K. A. இரகுநாயகம் மனைவியுடன் வந்து கருத்தரங்கைச் சிறப்பித்தார். அவருக்கு ஒரு கட்டுரைபடிக்கும் வாய்ப்பு கொடுக்காது போனதற்கு வருந்தினேன். மு. வ. வுக்கு ஒரு நினைவுச் சின்னம் ஏற்படுத்த நிதி தண்டப்படுகிற செய்தியைச் சொன்னேன். அவர் ஊர் திரும்பியவுடன் குடியாத்தம் திருமகள் நூற்பாலை நிறுவனத்திலிருந்து ரூ 500). டிராப்ட் மூலம் பாரிநிலைய அதிபர் K.A. செல்லப்பு னுக்கு (பொருளாளர்) அனுப்பிவைத்தார். வேறு மூவர்தலா 100/- வீதம் தந்திருந்தனர். திருவள்ளுவர் தங்கக் குழுக் கணக்கில் தூங்கிக் கொண்டிருந்த ரூ 2100/- க்கு 1. இவர் 1972 முதல் மு.வ. புதினங்கள் பற்றி டாக்டர் (பிஎச். டி) பட்டத்திற்கு ஆய்ந்து கொண்டிருந்தவர்.