பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

斯份的 நினைவுக் குமிழிகள்-4 பல்துறை வாயி லாகப் பைந்தமிழ்த் தொண்டு செய்தல்! தொல்லறி வாளர் பெற்றத் திறம்பெற்றுச் சிறந்தார் சுப்பு கன்னலின் இனிமை : தீந்தேன் கவின்சுவை இனிமை; பக்தி முன்னிய ஆழ்வார் பாட்டில் முழுநாளும் தோய்ந்து நிற்பார் தன்னிகர் இன்றி யாய்ந்தே தமிழ்ப்பணி செயமுன் நிற்பார்; மன்னவர் இன்றி ருந்தால் மாண்புகள் இவர்க்குச் செய்வார்! வெயிலது வெம்மை தன்னை விளைக்கின்ற வேங்க டத்தில் புயலென அருள் நீர் பாய்ச்சிப் புரிகின்றான் வேங்க டத்தான்! புயலருள் மழைநீர் கொண்டே புதுத்தமிழ்ப் பயிர்வி ளைக்கும் வியன்மிகு ஆற்றல் கொண்டார் வீறுமாக் குயர்ந்த சுப்பு! உளவியல் நூல்கள் செய்தார் உயர்விண்ணின் பயணம் சொன்னார் அளந்திட இயலா துள்ள அணு நுட்ப விளக்கம் சொன்னார் தெளிந்திட அறிவு நூல்கள் துறைதோறும் குவித்துத் தந்தார் களிதரும் கவிநூல் கற்றுத் திறனாய்வு நூல்கள் தந்தார்!