பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/595

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்துறையில் என் மணி விழா 56 f ஆழ்வார்கள் பாடல் தன்னில் ஆழ்ந்தின்பம் துய்த்த தாலே சூழ்ந்துள தொல்லை தம்மை சுடர்முகத் தாலே வெல்வர்! வீழ்கின்ற நாட்டை மீட்டும் வீறுடன் திகழச் செய்ய சூழ்ந்த நற் கல்வி யாலே அணிமணி தமிழ்க்குத் தந்தார்! ஆங்கில மொழிவ ளப்பம் அருந்தமிழ் பெறுதல் வேண்டும் துரங்காத அறிஞராலே துறைதோறும் நூல்கள் வேண்டும்! ஏங்கிடும் தமிழ்த்தாய் ஏக்கம் என்றென்றும் நீங்க எண்ணிப் பாங்குடன் உழைத்துத் தொண்டால் பன்னூல்கள் படைத்தார் வாழி! பைந்தமிழ்ப் பின்னால் சென்ற பசுங்கொண்டல் நெடிய மாலே ! சுந்தரன் தமிழ்ப்பாட் டுக்குச் சொக்கிய சிவனே! அன்று செந்துாரில் குருப ரற்குச் செந்நாவை வளைத்த வேலா! செந்தமிழ் பாடல் கேட்டுச் முத்தாரம் அளித்த கண்ண! பைந்தமிழ்ப் பாட்டுக் & fᏈ éa; பரிவுடன் ஏக்கங் கொண்டு முந்தியே வந்த நல்ல முழுமுதற் கடவு ளர்காள்! நீ -36