பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/604

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 நினைவுக் குமிழிகள்-4 தில்லி மேல் நிலை மன்ற (Supreme court) நீதிபதி ஜஸ்டிஸ் P. S. கைலாசம் அவர்களின் அணிந்துரை நூலைப் பெருமைப்படுத்துகின்றது. இதனைத் திருவரங்கம் பெரிய ஆசிரமம் பூரீமத் ஆண்டவன் சுவாமிகட்கு. நீண்டவன் குணத்தில் தோய்குரு கூரன நேயத்தோ டருள்கனிச் சாறும் வேண்டிய தளிக்கும் வடமொழி தந்த வித்தக நான்மறைத் தேனும் ஈண்டியெஞ் ஞான்றும் பாய்தலால் அமுதாம் இதயத்தைப் பெற்றிடு சீமத் ஆண்டவன் பாத மலரினில் வண்டாய் அருளினைத் துய்க்க இந்நூலே. என்ற பாடலால் அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன், அவருடைய ஆசியால் திருமால் வழிபாடும் வைணவ சமயத்தில் ஈடுபாடும் வளர்வதையும் உணர்கின்றேன். 1. இவர் இப்போது இல்லை. முருகன் திருவடிப்பேறு பெற்றார்.