பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி னைவுச் சிதறல்கள் 585 கிடைப்பதாகவும் சில நாட்களில் இந்த வருமானம் ரூ. 50/யும் எட்டும் என்றும் கூறினார். நாடோறும் இரவில் ஒரு முழுக் கோழி உணவில் சேர்ந்தால்தான் தமக்கு மன நிறைவு ஏற்படும் என்றும் சொல்லி முறுவலித்தார். இப்படியும் ஏழுமலையான் ஒருவருக்கு தினசரிப் படி அளப்பதைக் கண்டு நாங்கள் வியந்து போனோம். ஏழுமலையானின் சேவை முடிந்ததும் ஆகாய கங்கை, பாபநாசம், கோகர்ப்பம் முதலான இடங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு மாலை 6 மணிக்கு மலையடிவாரத்தை வந்தடைந்தோம். அடிவாரத்திற்கு வந்தவுடன் ஒரு அடி கூடஎன்னால் நடக்க முடியவில்லை; காலில் ஒரே வலி ஒரு ஆள் மிதிவண்டியில் ஏறி அறை வந்து சேர்ந்தேன். நண்பர்கள் யாவரும் இளைஞர்களாதலால் அவர்கட்கு வாகனம் தேவைப் படவில்லை; அவர்கள் நடந்தே வந்தனர். நண்பர்கள் யாவரும் 35 வயதுக்குக் கீழான வர்கள். என் வயது ஐம்பதை எட்டுவதாக இருந்தது. இன்னொரு நாள் பேருந்தில் காளத்தி சென்றோம். அடிவாரத்தில் கோயில் கொண்டிருக்கும் காளத்தி நாதனைச் சேவித்தோம். பின்னர் மலையேறி கண்ணப்பர் வழிபட்ட குடுமித் தேவரைத் தரிசித்தோம். இப்போது சேக்கிழார் பெருமானின், கானவர் பெருமா னார்தங் கண்ணிடத் தப்பும் போதும் ஊனமு துகந்த ஐயர் உற்றுமுன் பிடிக்கும் போதும் ஞானமா முனிவர் கண்டார்: நான்முகன் முதலா யுள்ள வானவர் வளம்பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப