பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/649

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் கலந்துகொண்ட இலக்கிய மாநாடுகள் 6 5 எல்லாருக்கும் ஒவ்வாது; ஒத்தும் வராது. பக்குவப் பட்ட மனத்தர்கட்கு மட்டிலும் இஃது ஏற்றது. இந்தப் பரந்த உலகில் மனப்பக்குவம் அடைந்தவர்கள் எத்தனை பேர் இருக்க முடியும்? இன்று இதை எழுதும்போது எனக் கிருக்கும் மன நிலை-அமைதியான மனநிலை-நான் துன்பம் அநுபவித்தபோது எனக்கில்லை. கோபதாபங் கட்கு ஆட்பட்டிருந்ததை இப்போது நினைந்து பார்க் கின்றேன். கூட்டம் முடிந்து திரு. ரெட்டி நெல்லூருக்குத் திரும்ப முடியவில்லை. ஒரு வாரம் தம் உறவினர் இல்லத்தில் திருப்பதியில் தங்க நேரிட்டு விட்டது. போக்கு வரவு வசதிகள் சீர்படாததால். - குமிழி-232 76. நான் கலந்து கொண்ட இலக்கிய மாநாடுகள் ாேன் திருப்பதியிலிருந்தபோது அனைத்திந்திய நிலையில் பல இலக்கிய மாநாடுகளில் கலந்து கொண்ட துண்டு. இந்த மாநாடுகள் தமிழகத்தில் நடைபெற்றால் ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் எழுதிச் சமர்ப்பிப்பதும் வெளி மாநிலங்களில் நடைபெற்றால் ஆங்கிலத்தில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதிச் சமர்ப்பிப்பதுமான வழக்கத்தை மேற்கொண்டிருந்தேன். ஏற்கெனவே முன் குமிழிகளில் நான் ஜப்பல்பூர், சென்னை,தில்லி, வாரணாசி என்ற இடங்களில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்து கொண்டதைக் குறிப்பிட்டுள்ளேன். இவைதவிர, விட்டுப் போன, நான் கலந்து கொண்ட மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் அவற்றில் என் பங்கையும் நினைவு கூர்கின்றேன்