பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/678

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 நினைவுக் குமிழிகள்-4 சென்றோம். எங்கள் கார்புறப்படுவதற்கு முன்னிருந்தே உணர்ச்சி என்னை ஆட்கொண்டது. கண்களும் குளமாயின. என் இதயத்தில் நிரந்தரமாக வாசம்செய்யும் ஏழுமலையான் துணையாக இருக்கும்போது நான் அஞ்ச வேண்டியதில்லை. சென்னையில் என்னைக் கொண்டு புதிதாக அவனால் கட்டுவிக்கப்பெற்ற அவன் வீட்டில் (வேங்கடன்") தான் நாங்கள் வாழ்கின்றோம். குடிலுக்கும் வேங்கடம்' என்று திருநாமம் சூட்டி யுள்ளேன். இப்போது அவனது இல்லத்தில்தான் நாங்கள் வாழ்கின்றோம். வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும் நான் கிடத்தும். நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால் கெடுமாம் இடம் ” -பொய்கையாழ்வார். வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்; வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும்; வேங்கடமே தானவரை வீழத் தனிஆழிப் படைதொட்டு வானவரைக் காப்பான் மலை’ -திருமழிசையாழ்வார் 2. முத. திருவந் 77 3. நான் திருவந் 48