பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/607

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 நினைவு அலைகள் 'பிறகு தோழியின் பெற்றோர்களின் காதுகளில் எப்படிப் போட வேண்டும் என்று தாங்கள் நினைக்கிறீர்களோ, அப்படிச் செய்யலாம். எக்காரணம் பற்றியும் இவ்வாய்ப்பினை நீங்கள் விரும்பாவிட்டால் தயவு செய்து என்னையும் என் தோழியையும் மன்னித்து விடுங்கள். "எங்கள் அடக்கமின்மையை மறந்து விடுங்கள். தயவுசெய்து இது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கட்டும் என்று தொடர் பீடிகை போட்டபின், ஆளை அடையாளங்காட்டியது, கடிதம். எப்படி? 'என்னுடைய தோழி என்னோடு தாவர இயல் ஆய்வில் ஈடுபட்டுள்ளாள். இன்னும் சில திங்களில் அந்தத் திட்டம் நிறைவுறும். 'ஆய்வு முடிந்த பிறகு, திருமணம் செய்து கொள்ளலாமென்று

T:ԱMTՃՃՃTLD -

'தோழி தாவரவியலில் ஏற்கெனவே, பி.எஸ்.ஸி. (சிறப்பு) பட்டம் பெற்றிருப்பதும் ஆய்வுக்குத் துணையாகும் பொருட்டு, ஜெர்மன் மொழியை முறைப்படி கற்றுக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். 'ஆய்வு நிச்சயமாக வெற்றி பெறும். அதற்கான எம்.எஸ்.ஸி. (ஆய்வு) பட்டம் கிடைப்பதும் உறுதி. 'இச்சிறப்புகளையுடைய என் தோழி எவர்? உங்கள் இனிய நண்பர். திரு. சா. குருசாமியின் மைத்துனி ஆவார். அவர் பெயர் காந்தம்மா. 'ஒரு முடிவிற்கு வருவதற்கு முன், மேற்கொண்டு ஏதும் தெரிந்து கொள்ள விரும்பினால், தயவு செய்து எழுதலாம். நான் இக்கடிதத்தை எழுதியது தவறாகப்பட்டால், தயவு செய்து எங்களை மன்னித்துவிட்டு எங்கள் எண்ணத்தை மறந்து விடக் கோருகிறேன்' என்று கடிதம் முடிந்தது. இப்படியொரு நிலையை நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. கூச்சம் நிறைந்த என் இயல்பு என்னைக் காதல் வெள்ளத்தில் தள்ளிவிடும் என்று நான் கனவும் கண்டதில்லை. என் சாதியொழிப்பு உணர்வை அறிந்த இரண்டொருவர். சில படித்த பெண்களின் பெயர்களை என்னிடம் சொல்லியதுண்டு. என் சார்பில், பெண் கேட்க முன் வந்ததும் உண்டு. அவற்றை நான் சிறிதும் பொருட்படுத்தியது இல்லை, ஏன்? மனைவியின் மாண்பு மனைவி, மனைத்தக்க மாண்புடையவளாக இருத்தல் இன்றியமையாதது. அப்படியிருந்தால் மட்டுமே, இல்லறம் இன்பமாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/607&oldid=787569" இலிருந்து மீள்விக்கப்பட்டது