பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாத்துரை

11



பைத் தந்தன. தமிழர் நிலை தாழ்ந்தது; அயல் நாட்டார் நமது நினைப்பைக் கேட்டு, கேலிசெய்கிற அளவுக்குத் தாழ்ந்தது.

நண்பர், தலைவர் மதியழகன் நான் வருங்காலத்தில் தமிழ்நாட்டின் தூதுவனாக மேல்நாட்டுக்குச் செல்லவேண்டுமென்று கூறினாரே, நான் வேண்டாம்; வேறு யாராவது ஒருவர் மேல்நாடு செல்லுகிறார் என்று வைத்துக்கொள்வோம். சென்றவரைப் பார்த்து மேல்நாட்டா ரொருவர், "ஆம்! தோழரே!! உமது நாட்டில் பேசப்பட்டுவரும் வாயு வாஸ்திரம் எவ்வளவு வல்லமை வாய்ந்தது. அதை எப்படிச் செய்வது, பிரயோகிப்பது?" என்று கேட்டால் நமது தமிழகத்தின் தூதர் என்ன பதில் சொல்லுவார். ஆனால், அவரே அகநானூறு, புறநானூறு காலத் தமிழ்நாட்டின் தூதுவராக ஜினிவாவோ அல்லது அமெரிக்காவோ சென்றிருந்தால் எப்படி அவரது நிலை இருந்திருக்கும்? அது எத்தகைய நினைப்பைத் தந்திருக்கும்? வாயுவாஸ்திரத்தைப் பற்றிய சர்ச்சை இருக்காது. எனவே 'எப்படிப் பதில் கூறுவது?' என்று இன்றைய தமிழ் நாட்டின் தூதுவருக்குத் தோன்றிய பிரச்சனையும் தோன்றியிருக்காது. பெருமிதத்துடன் தமிழ் நாட்டின் வேல், வில்லின் சிறப்பைப்பற்றியும், வீரத்தைப் பற்றியும், போர்முறையைப்பற்றியும் பேசும் நிலை ஏற்பட்டிருக்குமே! ஏன் இப்பொழுது அந்த நிலை இல்லை. அந்த நிலை எப்படி மாறியது? சிந்தித்துப் பார்க்கவேண்டும். தமிழனுடைய கலாசாரம், பழக்க வழக்கம், பண்பு, நாகரிகம்