பக்கம்:நிழல் முகங்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 五&练

என் அம்மாவிடம் சேத்துடு. சேத்துடு. அய்யப்ப சாமியே. ஒனக்கு மாலை போடுறேன். இவனையும் என்னையும் எங்கம்மாகிட்டே சேத்திடு. அவள் எப்படிக் கெட்டலைஞ்சாலும் பரவாயில்லை. நான் ஒத்துக்கிறேன். அம்மா... அம்மாதானே. பிள்ளை... பிள்ளைதானே. இதோ. இதோ. இவன் என் தம்பிதான். அப்படியே இல்லையானாலும் இவனைத் தம்பியாக்கி. அவனை அம்மா ஒரு மனித உறவைக் கொடு. மறக்காமல் கொடு.

ரயில் பயல் மனதில் இதுவரை தோன்றாத எண்ணச் சுமைகளோடும், இடுப்புச் சுமையோடும் நடந்தான். நடக்க நடக்க, அவனுக்குக் குழப்பம் வந்தது. இந்தக் குழந்தையை வைததுக் கொண்டு, என்ன செய்வது? பேசாமல் ரயிலுக்கு இவனைத் துரக்கிட்டுப் போயிடலாமா? "அப்"கள் பொறுப்பில் விடலாமா. பாவம் நாமே அவர்களுக்குச் சுமை. சுமைமேல் ஒரு சுமை

என்றாலும், அதனால் பாதிக்கப்படுபவன் சுமை தூக்கித்தானே?

ரயிலுக்குக் கொண்டு போவது நடக்காத காரியம். சுந்தரம் அப்பாகிட்டே கொண்டு போகலாமா. இவனையும் இரண்டாவது பிள்ளையாய் எடுத்துக்குவார். வேற வினையே வேண்டாம். அய்யாவோட சம்சாரம் இந்தக் குழந்தையும், அவருக்கும் மலேசியா அக்காவுக்கும் பிறந்ததாய் தம்பட்டம் அடிச்சுடும். பாவம்' அப்பா. இதோ பக்கத்துலதான் அவரோட ஒர்க்ஷாப். போகலாமா. கூடாது. அப்பா குடும்பம், நிம்மதியா இருக்கணுமுன்னால், அப்பா இனிமேல் என்னைப் பார்க்கக்கூடாது. அக்காவுக்கு நல்ல இடத்துல கல்யாணம் நடக்கணுமுன்னால் இனிமேல் என்னைப் பார்க்கக் கூடாது. பாவம் அப்பா. எப்படித் துடிக்காரோ. நான் துடிக்கறதை விட அதிகமாய்த்தான் துடிப்பாரு. ஒருவேளை. நான் அவரை உதாசீனப்படுத்திட்டதாய் நினைப்பாரோ. ஒரு தடவை. ஒரே தடவை அப்பாவிடம் போய். அப்பா ஏன் உங்ககிட்டே வரல என்பதாலேயே தொலைவாய் போயிட்டதாய் அர்த்தமில்லன்னு சொல்லிட்டு வரலாமா.

வேண்டாம். அப்பாவே என்னைத் தப்பாவே நினைக்கட்டும். அப்போதான். அக்காவோட கல்யாணத்துல இன்னும் அதிகமாய் அக்கரை காட்டுவாரு ஏண்டா பயலே. அப்படிப் பார்க்கிறே. நீ, விட்டுட்டுப்போன அம்மாவைப் பார்க்கத் துடிக்கிறே. நானோ. விடாமல் பிடிக்கிற அப்பாவைப் பார்க்கத் துடிக்கேன். எந்த வகையில் இல்லாமல் போனாலும் இந்த வகையிலாவது நாம் அண்ணன் தம்பிதான். ரயில் பயலுக்கு இடுப்பு வலித்தது. வலது பக்க இடுப்பில் இருந்து, இடது பக்கத்துக் இடுப்பிற்கு குழந்தையை மாற்றப் போனான். அவனால் முடியவில்லை. அவன் குச்சிக் கைகளால் இயலவில்லை. உடனே, ஒரு தந்திக் கம்பத்திற்கு அருகே