பக்கம்:நிழல் முகங்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சு. சமுத்திரம்

துறையினரைக் கொண்டு வந்து மிரட்டி, சர்வேயர்களைக் கொண்டு வந்து, காணாமல்போன நிலத்தைக் கண்டுபிடித்து விட்டார். ஆனால், அவர் நிலத்தை வாங்க எவரும் முன் வரவில்லை. “கொடுக்கதே கொடுக்கே. உன் அண்ணாச்சிக் கிட்டேயே விலைக்குக் கொடு" என்கிறார்களாம். அந்த அண்ணாச்சியோ, கொஞ்சம் கொஞ்சமாத்தான் பணம் தருவேன் என்று கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறாராம். என் பெரிய மாமா வேறு, இந்த அண்ணாச்சிக்கு வக்காலத்தாம். இந்தப் பின்னணியில், வைத்தியலிங்கம் வழக்கறிஞரை, நேரில் பார்த்து, என் கதையைச் சொல்லி இருக்கிறான். உடனே என்னைச் சந்திக்கும்படிச் சொல்லி விட்டார்."

"நான் அவரைப் போய்ப் பார்த்தேன். காவல்துறையினர் போக்கைச் சொன்னபோது, அப்படி நடப்பதுதான் அவர்கள் கடமை என்பதுபோல், சும்மா இருந்தார். என் மாமாவின் துரோகத்தைச் சொன்னபோது, விடப்படாது என்று கூறிவிட்டு, என் கதை ஏற்கெனவே தெரியும் என்பதுபோல் கேட்டார். பிறகு, இவரது நிலத்தை, வெளியாட்கள் வாங்கவிடாமல் என் பெரிய மாமா செய்யும் சில்மிஷங்களைச் சுட்டிக் காட்டி, அவரும் என் நிலையில் இருப்பதுபோல் பாவித்துக்கொண்டார். எப்படியோ, என்னை சென்னைக்கு வரும்படியும், அங்கிருந்து பெரிய மாமாமீது வழக்குப் போடலாம் என்றும், செலவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் சொன்னார். அதேசமயம், என் பெரிய மாமா நிலம் வாங்குவதற்குப் பணம் கேட்டு மலேசியாவிற்கு எழுதிய ஒரு கடிதமாவது வேண்டும் என்றார். பெரிய மாமனுக்கு ஐந்தாண்டு வாங் கி க் கொடுக் காம லோ எங்கள் .ெ சாத் தை மீ ட் டு க் கொடுக்காமலோ இருந்தால், தன் பெயர் முத்துசாமி இல்லை என்று சூளுரைத்தார்."

"நான் வீட்டிற்கு வந்தேன். பெரிய மாமா எழுதிய கடிதங்களை கோணச்சத்திரத்துக்காரன் கிழித்து விட்டான். எதற்கும் தேடிப் பார்க்கலாம் என்று சூட்கேஸையும், இதர பைகளையும் அல்சினேன். சூட்கேஸின் மேல் பகுதியை வேண்டா.வெறுப்பாய் ஜிப்பைத் திறந்து துளாவினேன். கடவுள் காட்டிக் கொடுத்து விட்டார். எப்போதோ வைத்த கடிதங்கள் கிடந்தன. அத்தனையும் பெரிய மாமா, தன் கைப்பட எழுதிய கடிதங்கள். அதுவும் சொத்துப் பத்துப் பற்றியவை. எனக்கு, ஆனந்தம் தாங்க முடியவில்லை. அதே ஆனந்தத்தில் கனம் தாங்க முடியாமல் நீர் நீராய்க் கீழே விழுகிறது. வக்கீல் என்னமோ ஒசி. ஆனால் சென்னைக்குப் போகவும் அங்கே தங்கி இருக்கவும் பணம் வேண்டுமே..?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/83&oldid=588362" இலிருந்து மீள்விக்கப்பட்டது