பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுமே தெரியவில்லை என்று அவன் அடிக்கடி எண் ணிைப் பார்த்தான். எப்படியும் அவனே மறுபடி விலைக்கு வாங்கி வருவதாகத் திருமதி ஷெல்பி முன்பு கூறிய வாக்குறுதியை அவள் கிறைவேற்ருமல் இருப்பாளா ? எங்த நேரமும் டாமின் மடிமீது விளையாடி வளர்ந்து கொண்டிருந்த ஜியார்ஜும் அவனே மறந்துவிட் டான ? அவர்கள் மறக்க மாட்டார்கள். எப்படியும் தனக்கு விரைவிலே விடுதலை வரும் என்று டாம் கம் பிக்கை கொண்டிருந்தான். ஆளுல் அந்த விடுதலை அவனைக் கென்டக்கியில் கொண்டு சேர்க்குமா, அல்லது வானுலகத்தில் சேர்க்குமா என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாகவில்லை. கையிலே வேதப்புத்தகம், வாயிலே ஆறுதலளிக் கும் இனிய சொற்கள், உடலால் ഥി ു.ങ്ങഥ களுக்கு உதவி ஆகியவற்றுடன் விளங்கிய டாமிடம் அடிமைகளுக்கு அளவற்ற அன்பு இருந்து வந்தது. வாய்ப்புக் கிடைத்த சமயங்களில், அவன் கிறிஸ்து காதரைப பற்றிய சில விவரங்களையும், கதைகளையும் அவர்களுக்குச் சொல்லி வந்தான்.

கேஸியும் எமிலினும் அகப்படவில்லை என்பதில் லெகிரி மிகவும் கோபம் கொண்டிருந்தான். இறுதியில் ஒரே ஒரு ஆளைப் பிடித்து விசாரிக்க வேண்டும் என்று அவன் திட்டம் செய்திருந்தான். அந்த ஆள்தான் டாம். ஆளுல் டாமை அவன் இதுவரை வசப்படுத் தவோ, பணிய வைக்கவோ முடியவில்லை. டாம் எந்த நேரமும், ஆண்டவர், ஆண்டவர் என்று வாயால் சொல்லிக் கொண்டிருந்ததுடன், அவரிடம் பூரண கம்பிக்கையும் கொண்டிருந்தான். ஆளுல் லெகி ரியோ, பேய் பிசாசுகளை நம்பி வந்தானே தவிர, நீ-8 II 3

113