பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாய்ங்து கொண்டிருந்தது. அதைக் கடந்து எப்படி யாவது ஒஹியோ ராஜ்யத்தை அடைந்துவிட வேண்டு மென்று அவள் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வெளியே குதிரைகள் ஓடிவரும் ஓசையும் கடச்சலும் கேட்டன. எலிஸா வெளியே ாட்டிப் பார்த்தாள். மூன்று குதிரைகளில் ஆட்கள் வந்துகொண்டிருந்தனர்; அவர்களில் இருவர் ஸாமும் ஆண்டியும் என்பதையும், மற்றவன் அடிமை வியா பாரி என்பதையும் அவள் தெரிந்துகொண்டாள். அந்த நேரத்தில் ஸாம் தனது தொப்பியைக் காற் றிலே பறக்க விட்டுவிட்டு, ஐயோ, என் தொப்பி போய்விட்டது இருங்கள், அதை எடுத்து வரு கிறேன்!" என்று உரக்கக் கூவிஞன். சாளரத்தின் வழியாக அவன் எலிஸாவைக் கண்டதால்தான், அவ ளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக, அவன் இவ்வாறு கூவிஞன். எலிஸா கண் கொட்டித் திறக்குமுன்னல், உறங் கிக்கொண்டிருந்த குழந்தையைத் துரக்கிக்கொண்டு, ஆற்றை நோக்கி ஓடினள். அப்பொமுது அவளை ஹேலி கண்டுவிட்டான். இந்தப் பெண் ஓர் அசுரப் பெண்ணுய்த்தா னிருப்பாள் ! காட்டுப் பூனையைப் போலல்லவா துள்ளிஓடுகிருள்' என்று அவன் சீறின்ை. அப்பொழுது ஸாம், இனி எங்களுக்கு வேலை யில்லை. குதிரைகளைக் கொண்டுபோய் எசமானரிடம் ஒப்படைக்கவேண்டும். உங்களுக்கு வணக்கம்' என்று சொல்லிவிட்டு, ஆண்டியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து திரும்பிச் சென்ருன். ஹேலி, குதிரைமீதிருந்து கீழே குதித்து, எலிஸா வைத் தொடர்ந்து ஓடினன். அவளுக்கு எங்கிருந்து

22

22