பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IV நமது மாணவர்கள் அன்பின் வழியைத் தெற்றெனத் தெரிந்துகொள்வார்கள். பாட நூல் மூலம் போதிக்கும் அறிவுரையின் துணையோடு இத்தகைய கதை நூல் மூலம் உணர்வுகளையும் நிகழ்ச்சிகளையும் உண்மை எனக் கொள்ளும் நிலை எய்தி மிகுந்த பயனை அடைவார்கள். அதிலும் இந்த நூலான "நீகிரோ மாமா" நிகழ்ச்சிகளை எளிதில் உண்மைபோல் காட்டும் திறன் படைத்திருக்கிறது. சமூகத்தில் மனித உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பும் மரியாதையும் வைத்துப் பழக நம் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் அதற்குப் பெரிதும் உதவக் கூடியது இந்த நூல். மாணவர் உலகம் பயனடையும் வண்ணம் இந்த நூல் அவர்களுக்கு ஒரு ஒளிவிளக்காக இருக்கட்டுமென்று கருதி, இதனை அவர்களுக்குப் பெருமையுடன் அளிக்கிறோம்.

                                                       -சித. ராமநாதன்