பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 3 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

ஆளுமையின் அற்புத அங்கமாக உயரம் உதவுகின்றது. உடன் வருகின்றது. உவப்பினைத் தருகின்றது.

உயரமாக உள்ள ஒருவனைப் பார்த்து மற்றவர்கள் அடையாளம் சொல்லும் பொழுதோ அல்லது வருணிக்கும் பொழுதோ கூறுகின்ற வார்த்தைகளையும் நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆகா! அவன் எவ்வளவு வாட்ட சாட்டமாக இருக்கிறான்!

ஆஜானுபாகுவாக அல்லவா இருக்கிறான் வயதுக்கேற்ற உயரம், எடைக்கேற்ற உயரம். பார்ப்பதற்குக் கம்பீரமாக கவர்ச்சியாகத் தோன்றுகிறான் என்றெல்லாம் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம்.

உயரம் நிறைய இருக்கும்பொழுது, உருவமும் அழகாகத் தோன்றுகிறது. உயரமானவனை மற்றவர்கள் மதிக்கும் போழுது, அந்த உணர்வே ஒருவனை, தன்னம்பிக்கை உடையவனாக மாற்றி.

மறுமலர்ச்சியையும் மன எழுச்சியையும் ஊட்டுகிறது. திரட்டுகிறது

நாகரிகம் எத்தனையோ புதுமை படைப்புகளை நம் வாழ்க்கையில் புகுத்தியிருக்கிறது. எத்தனையோ புது வழிகளை புது யுத்திகளை நமக்குப் புகட்டியிருக்கிறது. அந்த யுக்திகளுக்குள்ளே அற்புதக் கோலமாக அலங்கோலம் என்று கூட நாம் கூறலாம் காட்சி தருவது ஆண்களும் பெண்களும் கால்களுக்கு செருப்பு அணிந்து கொண்டு நடப்பதுவும் ஒன்றாகும்

மக்களை மருட்சியிலும் திகைப்பிலும் வியப்பிலும் ஆழ்த்துவதற்காக ரோட்டிலே வித்தை காட்டுகின்ற வித்தைக்காரன் ஒருவன். ஓரடி அல்லது ஈரடி உயரம் உள்ள கம்புகளில் கால்களை விட்டுக் கட்டிக் கொண்டு நடந்து காட்டுவான். அந்த